கொல்கத்தா, ஜன.17- கொரோனா 3-ஆவது அலை மற் றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் எழுந் துள்ள நேரத்தில் கங்கா சாகர் திரு விழாவில் பல லட்சம் பேர் கூடியது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பமேளாவைப் போன்றே கங்காசாகர் மேளாவும் மிகப் பெரிய திருவிழாக்களில் ஒன்றாகும். மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் கபில் முனி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை மையப்படுத்தி, மகர சங்கராந்தி அன்று கங்காசாகர் மேளா நடை பெறும். உலகம் முழுவதும் இருந்து இந்த கங்காசாகர் மேளாவில் பக்தர் கள் கலந்து கொள்வார்கள். கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரத்தில் நீராடுவார்கள். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அபாயம் கார ணமாக, கங்காசாகர் மேளா நடை பெறவில்லை. ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக இந் தாண்டும் கங்கா சாகர் மேளா சந்தேக மாகவே இருந்தது. ஆனால், “கொரோனா வைரஸ் எல்லாம் இல்லை. இதற்குப் பயந்தெல் லாம், மதத்தலத்திற்கு வருவதை மக் கள் நிறுத்திக்கொள்ள மாட்டார்கள்.
இந்த முறை கங்கா சாகர் மேளாவிற்கு பக்தர்கள் கண்டிப்பாக வருவார்கள்” என்று கபில் முனி கோயில் தலைமை அர்ச்சகர் கியான் தாஸ் கூறினார். அதன்படியே எவ்வித கொரோனா விதிமுறைகளையும் கடைப்பிடிக்கா மல் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமா னோர் கூடி, கங்கா சாகர் மேளாவை கொரோனா தொற்று உற்பத்தி மைய மாக மாற்றியுள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் 15 லட்சம் பக்தர்கள் கங்கா சாகருக்கு வந்திருந்த நிலையில், இந்தாண்டு 10 நாட்களில் 20 லட்சம் பக்தர்கள் நீராட லுக்கு வந்துள்ளனர். இவர்கள் சாகர் முகத்துவாரத்திற்கும் மூரிகங்காவிற கும் இடையே ஆற்றில் பயணிக்க படகுகளைப் பயன்படுத்தியுள்ளனர். 100 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக் கப்பட்ட படகுகளில் சுமார் 350 பேர் வரை நெருக்கமாக பயணித்துள்ள னர். “பக்தர்கள் சாகர் தீவுக்குச் செல்வ தற்கு முன்பு 1.5 லட்சத்திற்கும் அதிக மான முகக் கவசங்கள் வழங்கப் பட்டன. இருப்பினும், சுமார் 50 சத விகித பயணிகள் அவற்றை அணிவது பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித் தோம்.
ஆனால் மக்கள் விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை” என்று பரீக்ஷித் பிஸ்வாஸ் என்ற தன்னார்வ தொண்டர் தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணியாமல் வந்த 55 வயதான பிரேம் பார்தி என்பவ ரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி யாளர் இதுபற்றி கேட்டபோது, “மெயின் சாது ஹன். ஹம் சதா ஆத்மி ஹைன். ஹம்கோ மாஸ்க் கி ஜரூரத் நஹின் ஹைன். (நான் ஒரு பார்ப்ப னன் மற்றும் எளிமையானவன். எனக்கு எந்த முகக்கவசமும் தேவையில்லை) என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் வசிக்கும் தஷ்மி பிரசாத் (61) என்பவரோ, “என்ன தடுப் பூசியா? நான் ஏன் தடுப்பூசி போட வேண்டும்?” என்று கூறியுள்ளார். இந்த அலட்சியம் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை யில் எதிரொலித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் டிசம்பர் 28 முதல் ஜனவரி 13-க்குள், கொரோனா தின சரி கேஸ்கள் 732-இல் இருந்து 23 ஆயிரத்து 467 ஆக உயர்ந்து விட்டது. இதனை மாநில சுகாதாரத்துறையே கூறியுள்ளது. அதாவது, டிசம்பர் 28 அன்று 2.35 சதவிகிதத்தில் இருந்து, ஜனவரி 13-க்குள் 32.13 சத விகிதமாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.