புதுதில்லி, நவ. 30 - ஆயுள் தண்டனைக்கு எதிரான, தனது மேல்முறையீட்டு மனு மீது, குஜ ராத் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்து வது, ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசால் பழி வாங்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதி காரி சஞ்சீவ் பட், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு மதவன்முறை நடந்தபோது, அங்கு ஐபிஎஸ் அதிகாரியாக பணி யாற்றியவர் சஞ்சீவ் பட். பின்னாளில் குஜராத் வன்முறை தொடர்பாக விசார ணை நடத்தப்பட்டபோது, 2002 கல வரத்திற்கு அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உடந்தையாக இருந்த தாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக 2011 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். வகுப்புவாதக் கலவரம் நடந்த- பிப்ரவரி 27, 2002 அன்று, காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய பிரதமர் மோடி, “வன்முறையில் ஈடு பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கக் கூடாது” என்று மாநில காவல்துறைக்கு அறிவுறுத்திய தாகவும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தானும் ஒருவர் என்று தெரிவித்தார். எனினும், விசார ணை முடிவில், சிறப்பு புலனாய்வு குழு வை அமைத்த நீதிமன்றமே, பிரதமர் மோடியை குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கிவிட்டது. இதனால் சஞ்சீவ் பட் கூறியவை அனைத்தும் ஒன்றுமில்லா மல் போனது.
வழக்கிலிருந்து பிரதமர் மோடி விடுக்கப்பட்டு விட்ட பின்னணியில், மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சவ் பட் மீது பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கியது. 2015-ஆம் ஆண்டில், சஞ்சீவ் பட் காவல்துறை சேவையிலிருந்து நீக்கப் பட்டார். அதுமட்டுமல்லாமல், 30 ஆண்டு களுக்கு முன்பு 1990-ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபுதாஸ் மாதவ்ஜி வைஷ் ணானி என்பவரின் காவல் நிலைய மரணத்திற்கு சஞ்சீவ் பட் காரணமாக்கப் பட்டு கைது நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டார். அக்டோபர் 2015 இல், குஜராத் அரசு தனக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளுக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்க வேண்டும் என்று சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆனால், உச்ச நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. இறுதியாக, காவல்நிலைய மரண வழக்கில், ஜூலை 2019-இல், குஜராத்தில் உள்ள ஜாம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம், சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
முன்னதாக, விசாரணை நீதி மன்றத்தில், காவல் நிலையச் சாவு தொடர்பான தன்மீதான குற்றச்சாட்டு க்கு ஒரு மருத்துவரின் நிபுணத்துவ சான்றுகளை சமர்ப்பிக்க விண்ணப் பித்தார். ஆனால், இந்த மனுவை விசார ணை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, தனது ஆயுள் தண்டனைக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடிய சஞ்சீவ் பட், அங்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 319-ஆவது பிரிவின் கீழ் நிபுணத்துவ ஆதாரங்களைச் சேர்க்கக் கோரி விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பத்தை ஆகஸ்ட் 2022-இல், உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவை யில் உள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் சஞ்சீவ் பட்டின் குற்றவியல் மேல்முறை யீட்டை வழக்கமான விசாரணைக்கு பட்டியலிட்டது. அவரது வழக்கறி ஞர்கள் ஒத்திவைக்க கோரிய போதி லும், அதனை ஏற்க, குஜராத் உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது. இந்தப் பின்னணியில், கூடுதல் ஆதாரங்களைச் சேர்ப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முந்தைய சிறப்பு விடுப்பு மனுவின் (special leave petition) முடிவுக்குக் காத்திருக்காமல், குற்றவியல் மேல் முறையீட்டை உயர் நீதிமன்றம் விசா ரிக்கத் தொடங்கினால், பெரும் சிரமம் ஏற்படும் என்று, சஞ்சீவ் பட் புதிதாக ஒரு சிறப்பு விடுப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் அல்ஜோ ஜோசப் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.