states

img

சிறுபான்மையினரை புறக்கணித்ததற்காக இந்தியா ஒரு நாள் வருத்தப்படும்

கொல்கத்தா, ஜன.14- முஸ்லிம்கள் போன்ற சிறு பான்மையினரைப் புறக்கணித்த தற்காக இந்தியா என்றாவது ஒரு நாள் வருத்தப்படும் என்றார் நோபல் பரிசு பெற்ற பொருளா தார நிபுணர் அமர்த்தியா சென். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டி: தேசத் தந்தை மகாத்மா காந்தி,  சமூகத்தின் அனைத்துப் பிரிவின ருக்கும் “நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்  நாட்டில் நேர்  மையான அரசியல், தேசிய நலன்  களுக்காகவும் பணியாற்றினார்.  “நான் (அமர்த்தியா சென்)  பார்க்கும் வகையில், சிறுபான் மையினரின் பங்கைக் குறைப்  பது, அவர்களின் முக்கியத்து வத்தைக் குறைப்பது நேரடியாக வும் மறைமுகமாகவும் நாட்டில் “இந்து பெரும்பான்மை சக்தி களின் பங்கை அதிகரிப்பதா கும்”. இது பாஜகவின் நோக்கங்  களில் ஒன்று.  குடியுரிமை திருத்தச் சட்  டத்தை  இந்தியாவில்அமல்படுத்து வது, நாட்டில் சிறுபான்மையின ரின் பங்கைக் குறைக்கும். பெரும்  பான்மை சக்திகளை ஊக்கு விக்கும் என்றார். வங்கதேசம், பாகிஸ்தான் மற்  றும் ஆப்கானிஸ்தானில் இருந்து  குடியேறிய முஸ்லிம் அல்லாத வர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஒன்றிய அரசு  விரும்பு கிறது. அதற்கான சட்டம் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது, டிசம்பர் 12-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்பு தல் பெறப்பட்டது. இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்ட  விதி கள் இன்னும் வடிவமைக்கப்படா ததால் சட்டம் இன்னும் செயல் பாட்டிற்கு வரவில்லை.

இழிவுபடுத்தும் மோசமான நடவடிக்கை

மதச்சார்பற்ற, சமத்துவ தேச மாக இருக்க வேண்டிய இந்தியா  போன்ற ஒரு நாட்டிற்கு இது மிக வும் துரதிர்ஷ்டவசமானது. குறிப்  பாக வங்கதேசம் அல்லது மேற்கு  வங்கத்தில் வசிக்கும் சிறு பான்மையினரை அவர்கள் இந்தி யாவின் பூர்வீகமக்கள் அல்ல. அவர்கள் வெளிநாட்டினர் என  அறிவிக்கப்படும்  துரதிர்ஷ்டவச மான பாரபட்சமான நடவ டிக்கைக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் பயன்படுத்தப்படும். இது சிறுபான்மை மக்களை இழிவு படுத்தும் மோசமான நடவ டிக்கை ஆகும்.  மகாத்மா காந்தி ஒரு குழு விற்கு எதிராக மற்றொரு குழு வை வளர்க்க முயற்சிக்க வில்லை.  “மதத்தின் அடிப்படை யில்  அவர் இந்துவாக இருந்த  போதிலும்”, சுதந்திரத்திற்கு முன்பு இருந் ததை விட முஸ்லிம்  களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க அவர் தயாராக இருந்தார். முஸ்லிம்கள் போன்ற சிறு பான்மையினரைப் புறக்கணித்த தற்காக இந்தியா என்றாவது ஒரு  நாள் வருத்தப்படும் என்றார். பாஜக தலைமையிலான ஒன்  றிய அரசு அதன் செயல்பாட்டில் முன்னேற்றம் கண்டுள்ளதா என்ற கேள்விக்கு, முன்னேற்றம் காணவில்லை என பதிலளித் தார் அமர்த்தியா சென்.