states

நாட்டின் தலைநகர் ஒழுங்கீனத்தின் உச்சமாக உள்ளது தில்லிக்கு வரவே எனக்கு பிடிக்கவில்லை!

புதுதில்லி, பிப். 22 - ஒழுங்கீனத்தின் உச்சமாக உள்ளதால், தலைநகர் தில்லி க்கு வரவே எனக்குப் பிடிக்கவில்லை என்று ‘இன்போசிஸ்’ கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமனாருமான நாராயண மூர்த்தி கூறியுள்ளார். தில்லியில் அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பு நிறு வன விழாவில் பங்கேற்று நாராயண மூர்த்தி சிறப்புரை யாற்றினார். அப்போதுதான் மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாராயணமூர்த்தி மேலும் கூறியிருப்ப தாவது: நான் தில்லிக்கு வருவதையே அசவுகரியமாக கருது கிறேன். ஒழுங்கீனம் மோசமாக உள்ள நகரங்களில் ஒன்றாக தில்லி உள்ளது. ஒரு உதாரணம் தருகிறேன். நேற்று நான்  விமான நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருந்த போது கவனித்தேன். சிவப்பு சிக்னலில் பல கார்களும், பைக்குக ளும் சிக்னல் விதிமுறைகளை மீறி பயணிக்கின்றன. ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் கூட காத்திருக்க நம்மால் முடியா தா என்ன? இதுபோன்ற சிறிய சிறிய விஷயங்களில் கூட,  நாம் நமது குழந்தைகளை கவனித்து பயிற்றுவிக்க வேண்டும்.  அதுதான் அவர்களை சரியான பாதையில் வழிநடத்தும்.  இந்தியாவில் பிறர் திருடும்போது அதைப் பார்த்து சிரித்து கொண்டே அமைதியாக இருந்தால் உன்னை நல்லவன் என்பார்கள். அப்படிப்பட்ட இந்தியனாக நான் இருக்க விரும்பவில்லை. தவறு என்றால் எழுந்து நின்று மரி யாதையான முறையில் தவறை சுட்டிக்காட்டுவேன். நமது தனிப்பட்ட சொத்துக்களை பராமரிப்பதை போலவே, பொ துச் சொத்துக்களையும் பராமரிக்க சொல்லித் தர வேண்டும். இந்த கொள்கையை நாம் பின்பற்றாமல் போனதே பொது  நிர்வாகத்தில் சீர்கேடு நிலவுவதற்கு காரணமாகிவிட்டது.” இவ்வாறு நாராயணமூர்த்தி பேசியுள்ளார்.