states

கீவ் நகரத்திலிருந்து இந்தியர்கள் உடனே வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

புதுதில்லி,மார்ச் 1- எந்த வகையான போக்குவரத்தையும் பயன்படுத்தி உக்ரைன் தலைநகரம் கீவ்விலிருந்து இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக இந்திய  அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆபரேசன் கங்கா  மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர் களை மீட்க நான்கு ஒன்றிய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இந்த சூழலில் தில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1 அன்று  நேரில் சந்தித் தார். இந்த சந்திப்பின்போது உக்ரைன் விவ காரம் தொடர்பாகவும், உக்ரைன் விவகா ரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, மாண வர்கள் மீட்பு பணி குறித்து பிரதமர் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தொடர்ந்து உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.    இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்தியர்களை உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறி வுறுத்தியுள்ளது. இதன்படி ரயில்கள் அல்லது  எந்த வகையான போக்குவரத்தை யும் பயன்படுத்தி தலைநகரை விட்டு உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.