states

img

ஜனநாயகம் காக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு

புதுதில்லி, அக்.26- இந்திய நாடு பொய் மற்றும் வஞ்சக அரசிய லிடம் மாட்டிக் கொண்டுள்ள நிலையில், ஜன நாயகம் காக்கும் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் ஓரணியில் திரள்வோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உட்கட்சித் தேர்த லில் 80 வயது மல்லிகார்ஜூன கார்கே காங்கி ரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்  புதனன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண் டார். தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மல்லி கார்ஜூன கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்  பட்டதற்கான சான்றிதழை, தேர்தல் பொறுப்பா ளர் மதுசூதன் மிஸ்திரி வழங்கினார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலை வர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் பொறுப்பு களை புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து தலைவராக பதவி யேற்றுக் கொண்ட மல்லிகார்ஜூன கார்கே கட்சி யினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இது எனக்கு உணர்ச்சிகரமான தருணமா கும். தொழிலாளியின் மகனாக, சாதாரண தொழிலாளியான என்னை கட்சியின் தலை வராக்கியதற்காக காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றியை கூறிக் கொள்கிறேன்.  சோனியா காந்தி எப்போதும் உண்மையா னவராக இருந்தார். அவர் நமக்கு காட்டிய முன்மாதிரி சார்புகளற்றது. அவரது தலைமை யின் கீழ் இரண்டு ஐக்கிய முற்போக்கு கூட்  டணி அரசுகள் அமைந்தன. அந்த அரசு ஆட்சி யில் இருந்தபோது, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்  றவை அமல்படுத்தப்பட்டன.

நாடு தற்போது பொய் மற்றும் வஞ்சக அரசி யலை பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பொய் அரசியலுக்கு எதிராக போராடுவோம். கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்  பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கை கோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  காங்கிரசால் நிறுவப்பட்ட ஜனநாயக அமைப்பை மாற்ற இன்று முயற்சிகள் மேற்  கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் காங்கிர சின் சித்தாந்தம் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படையோடு கலந்து உள்ளது. இது கடி னமான நேரம் என்பது எனக்குத் தெரியும். உட்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி  காங்கிரஸ் மட்டுமே. தேர்தல் அதை நிரூபித்தது. ராகுல்காந்தியின் நடைபயணம் சிறப்பா னது. இது நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கி றது. காங்கிரஸ் கட்சி வரலாற்றுச் சிறப்பு மிக்க  நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ராகுல் காந்தி  மக்களிடம் நேடியாக பேசுகிறார். பிளவுபடாத இந்தியாவை விரும்பும் மக்களை அவர் திரட்டுகிறார்.  இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசி னார்.

முன்னதாக சோனியா காந்தி பேசுகையில், “நான் மிகவும் நிம்மதியாக இன்று உணர்கி றேன். காங்கிரஸ் கட்சியினர் காட்டிய அன்பை யும், நீங்கள் எனக்கு அளித்த மரியாதையை யும் நான் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மதிப்பேன். ஆனால், அந்த மரியாதை மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்தது. என்னால் முடிந்த அளவுக்கு எனது பணியினை நான் சிறப்பாக செய்தேன். என் தோள்களின் மேல்  ஒரு சுமை இருந்தது. அந்த பொறுப்புகளில் இருந்து இன்று நான் விடுபடுகிறேன். அத னால் இயல்பாகவே நான் நிம்மதியாக உணரு கிறேன். காங்கிரஸ் கட்சி பல சவால்களை சந்தித்துள்ளது. அந்தச் சவால்களை முழு பலத்துடன் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற்றோம். தற்போது நமக்கு முன்னால் நாட்  டின் ஜனநாயக மதிப்புகளுக்கு ஏற்பட்டிருக் கும் அச்சுறுத்தல் மிகப் பெரிய சவாலாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது மிகப் பெரிய பொறுப்பு. இனி இந்த பொறுப்பு மல்லி கார்ஜுன கார்கேவினுடையது. கார்கே தலை மையில் காங்கிரஸ் உத்வேகம் பெற்று வலுவ டையும் என நம்புகிறேன். புதிய காங்கிரஸ் தலை வர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவர்  ஒரு சாதாரண தொண்டனாக இருந்து தனது  கடின உழைப்பின் மூலம் இவ்வளவு உயரத் திற்கு உயர்ந்து இருப்பது பெரிய திருப்தியை அளிக்கிறது” என்று குறிப்பிட்டார். மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தலை வர் பதவியை ஏற்பதற்கு முன்னதாக, காலை யில் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நினை விடங்களில் அஞ்சலி செலுத்தினார்.