புதுதில்லி, ஜன. 19 - “உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக ஏற்கெனவே சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முந்தியிருக்கலாம்” என ‘புளூம்பெர்க்’ நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 70 லட்சமாக இருந்தது. இது சீனாவால் அறிவிக்கப்பட்ட 141 கோடியே 20 லட் சத்தை விட 50 லட்சம் அதிகமாகும். இருப்பினும், இந் தாண்டின் பிற்பகுதியில்தான் இந்தியா இந்த மைல்கல்லை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை எதிர்பார்க்கிறது. ஆனால், மேக்ரோட்ரெண்ட்ஸ் என்ற ஆராய்ச்சி தளத்தின் மற்றொரு மதிப்பீட்டின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியே 80 லட்சம் என்று ‘புளூம் பெர்க்’ தெரிவித்துள்ளது. இதன்படி அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக, ஏற்கெனவே சீனாவை முந்தி இந்தியா முதலிடத்தை பிடித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது. மறுபுறத்தில், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகை யில் முதன்முறையாக சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. சீன தேசிய புள்ளியியல் அமைப்பு வெளி யிட்டுள்ள அறிவிப்பின்படி, ”சீனாவில் 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022-ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021-ஆம் ஆண்டை விட 2022-ஆம் ஆண்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் குறைந்துள்ளது. இந்தியாவிலும் மக்கள்தொகை வளர்ச்சி குறைந் திருந்தாலும், குறைந்தபட்சம் 2050 வரை இந்த எண் ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதே உலக மக்கள்தொகை மதிப்பாய்வு ஆகும். 2022 மற்றும் 2050-க்கு இடையே, காங்கோ, எகிப்து, எத்தியோப்பி யா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பு இருக்கும் என்பது ஐக்கிய நாடுகள் அவையின் கணிப்பு ஆகும்.