states

img

சீனா உடனான வர்த்தகப் பற்றாக்குறை 8.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு!

புதுதில்லி, ஜன. 14 - சீனா உடனான இந்தியாவின் வா்த்த கப் பற்றாக்குறை முதல் முறையாக ரூ. 8.2 லட்சம் கோடியைக் கடந்துள் ளது.  அதாவது, சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பைக் காட்டிலும் ரூ. 8 லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பொருட்களை சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில், இந்தியா - சீனா ஆகிய 2 நாடுக ளுக்கு இடையேயான வா்த்தகம் முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு சுமார்- 10 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்த வா்த்தக மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம் கோடி யாக இருந்தது. இதில், சீனா 9 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்களை இந்தி யாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.7 சதவிகிதம் அதிகம். மறுபுறத்தில், இந்தியா ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடு கையில் 37.9 சதவிகிதம் குறைவாகும்.  இவ்வாறு சீனாவுக்கான இந்தி யாவின் ஏற்றுமதி 37.9 சதவிகிதம் குறைந்து, மறுபுறத்தில் இறக்குமதி 21.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஏற்றுமதி - இறக்குமதிக்கு இடையி லான வித்தியாசம்தான் ரூ. 8 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக மாறியுள்ளது.  இதுவே, 2021-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தக இடைவெளி அல்லது பற்றாக்குறை சுமார்- ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி யாக இருந்த நிலையில், அது தற்போது சுமாா் ரூ. 8 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது. 

உலக அளவில்  சீனாவின் மொத்த ஏற்றுமதி ரூ.320 லட்சம் கோடி

கடந்த 2022-ஆம் ஆண்டில் சீனா வின் சா்வதேச ஏற்றுமதி மதிப்பு சுமார் ரூ.320 லட்சம் கோடியாக அதிகரித்துள் ளது. இதில், வா்த்தக மிகை மதிப்பு மட்டும் சுமார்- ரூ.70 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, இறக்கு மதி மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக சுமார் ரூ.70 லட்சம் கோடி ரூபாய் அள விற்கான பொருட்களை ஏற்றுமதி செய் துள்ளது. சீனாவின் ஏற்றுமதி ரூ.320 லட்சம் கோடிகள் என்றால், ஒட்டு மொத்த இறக்குமதி மதிப்பு ரூ.240 லட்சம் கோடியாக உள்ளது.