புதுதில்லி, அக். 29 - அக்டோபர் 21-ஆம் தேதியுடன் முடிவ டைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய வீழ்ச்சிக் கட்டத்தை அடைந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று அதிக பட்சமாக 642.45 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது கடந்த அக்டோபர் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 528.37 பில்லியன் டாலராக குறைந்தது. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி யால் பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்களின் படி, அக்டோபர் 21-ஆம் தேதியுடன் முடிவ டைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையி ருப்பில் மேலும் சரிவு ஏற்பட்டு, அது 524.52 பில்லியன் டாலராக வீழ்ச்சி அடைந்துள் ளது. 2020 ஜூலை மாதத்திற்குப் பிறகு, இதுவே மிகக்குறைந்த அந்நியச் செலா வணி கையிருப்பு என்பது குறிப்பிடத்தக் கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3.85 பில்லி யன் டாலர் குறைந்துள்ளது.
கடந்த 2021 செப்டம்பர் 3-ஆம் தேதியின் அந்நியச் செலாவணி கையிருப்பான 642.45 பில்லியன் டாலரோடு ஒப்பிடுகையில், 2022 அக்டோபர் 21 அன்று சுமார் 117.93 பில்லியன் டாலர் அளவிற்கு அந்நிய செலா வணி கையிருப்பில் ஓட்டை விழுந்துள்ளது. ஆசியாவின் 3-ஆவது பெரிய பொரு ளாதார நாடாக விளங்கும் இந்தியா, அமெ ரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப் பின் சரிவைச் சமாளிக்க முடியாமல் பல வாரங்களாக தடுமாறி வருகிறது. தொடர்ந்து 6 வாரமாக ரூபாயின் மதிப்பு சரிந்து, அக்டோ பர் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத் தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் 83 ரூபாய் அளவிற்கு சென்றது. வெள்ளிக்கிழமையன்று 82.6750 ரூபாயாக இருந்தது. கடந்த 6 வாரங்களில் சுமார் 4 சதவிகிதம் அளவிற்கு ரூபாய் மதிப்பு சரி வைச் சந்தித்தது. இதனால் இந்தியாவின் இறக்குமதிக்கு அதிகத் தொகை செலுத்த வேண்டிய நிலை உருவானது. ரூபாய் மதிப் பின் சரிவைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை இந்தக் காலத்தில் செலவு செய்தது. ஆயினும் ரூபாய் மதிப்பு இந்த ஆண்டில் 12 சதவிகிதம் சரிந்து, தற் போது அந்நியச் செலாவணி கையிருப்பை யும் அது பதம் பார்த்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு சரி வுக்கு, அந்நிய நாணய சொத்துக்கள் (Foreign Currency Assets - FCA) வீழ்ச்சியும் மிக முக்கியக் காரணமாக மாறியிருக்கி றது. அந்நிய நாணய சொத்துக்கள் (FCA) என்பது யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்க டாலர் அல்லாத நாண யங்களின் மதிப்பு அல்லது தேய்மானம் ஆகும். இது அந்நிய செலாவணி கை யிருப்பில் பெரும்பகுதியை வகிக்கிறது. அந்த வகையில், அக்டோபர் 21-ஆம் தேதி யுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நிய நாணய சொத்துக்கள் 3.59 பில்லியன் டாலர் சரிந்து 465.08 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. தங்கம் கையிருப்பு 247 மில்லியன் டாலர்கள் சரிந்து, 37.21 பில்லி யன் டாலர்களாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்காரணமாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 12 வாரங்க ளில் 11 வாரங்கள் சரிவிலேயே பயணித்துள் ளது. அக்டோபர் 7ஆம் தேதி உடன் முடிவ டைந்த வாரத்தில் மட்டும் தங்க இருப்பின் மதிப்பு அதிகரித்த காரணத்தால் அந்த ஒரு வாரம் மட்டும் அந்நியச் செலாவணி கையி ருப்பு உயர்வுடன் இருந்துள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியால், பண வீக்க விகிதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்பதால், நிலைமையை சமாளிப்பது தொடர்பாக, நவம்பர் 3 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழுவின் (MPC) அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பணவீக்க இலக்கை கட்டுக்குள் கொண்டுவருவதற் காக, ரிசர்வ் வங்கி சட்டத்தின் 45ZN பிரிவின் கீழ் இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள் ளது. ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள் கைக்குழு கூட்டம் கடைசியாகச் செப்டம்பர் 28 - 30 தேதிகளில் கூடியது. இதன்படி அடுத்த கூட்டம் டிசம்பர் 5,6,7 தேதி களில்தான் நடைபெற வேண்டும். ஆனால், தற்போது ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தை மேலும் உயர்த்துவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது.