states

img

புனே-யில் பொதுமக்களிடம் ரூ. 300 கோடி மோசடி: ‘அஷ்டவிநாயக்’ செல்வகுமார் நாடார் தலைமறைவு!

புனே, மார்ச் 25 - மகாராஷ்டிர மாநிலம், புனேயில் இயங்கிவந்த ‘அஷ்டவிநாயக் இன் வெஸ்ட்மெண்ட்’ நிறுவனத்தின் உரி மையாளர் செல்வகுமார் நாடார், பொதுமக்களிடம் 300 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துவிட்டு தலை மறைவாகி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதா வது: காரடியில் தங்கியிருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணரான பிர பாத் ரஞ்சனுக்கு (46), கடந்த 2021 ஜூலையில் ‘அஷ்டவிநாயக் இன் வெஸ்ட்மெண்ட்’டின் டெலிமார்க் கெட்டர்களிடமிருந்து அழைப்பு வந்துள் ளது. அதில், உங்களின் கடனை குறைந்த வட்டியில் மாற்றுவதற்கு உதவுகிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.  அதன்படியே பிரபாத் ரஞ்சனின் சுய விவரத்தைப் பயன்படுத்தி பல்வேறு வங்கிகளில் ‘அஷ்டவிநாயக் இன் வெஸ்ட்மெண்ட்’ கடன் வாங்கிக் கொடுத்துள்ளது. பிரபாத் ரஞ்சனும் தனக்கு கிடைத்த கடன் தொகையில், ஒருபகுதியில் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு, மீதியை ‘அஷ்ட விநாயக்’ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.  இவ்வாறு பெற்ற முதலீட்டிற்கு ‘அஷ்டவிநாயக்’ நிறுவனத்திலிருந்து பிரபாத் ரஞ்சனுக்கு வட்டி செல்லும் என்பதுடன், 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீடு செய்த தொகையில் 5 சதவிகி தத்தையும், 5 வருடமுடிவில் மற்றொரு 5 சதவிகிதத்தை திருப்பித்தரும் என்பது ஒப்பந்தமாகும்.

மேலும், வேலை இழப்பு ஏற் பட்டால் பூஜ்ஜிய சதவிகித வட்டியில் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு வருமான ஆதரவு மற்றும் மருத்துவ அவசர நிலைகளைச் சமாளிக்க இதே போன்ற நிதி உதவியும் அவருக்கு தரப்படும் என ‘அஷ்டவிநாயக்’ சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதேபோல சுமார் 200 நபர்களுக்கு தனிநபர் கடன் பெற்றுத்தந்து அதி லிருந்து ‘அஷ்டவிநாயக்’ நிறுவனம் சுமார் ரூ. 300 கோடி வரை முதலீட்டைத் திரட்டியுள்ளது. ஒவ்வொருவரின் பெய ரிலும் பல வங்கிகளில் கடன் பெற்றுள் ளது. குறிப்பாக பிரபாத் ரஞ்சன் பெயரில் மட்டும் 6 வங்கிகளில் ரூ. 88 லட்சம் கடனாக பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘அஷ்டவிநாயக் இன்வெஸ்ட்மெண்ட்’டின் உரிமையா ளர் செல்வகுமார் நாடார், திடீரென தலைமறைவாகி விட்டதாக கூறப்படு கிறது.  இது பிரபாத் ரஞ்சன் போன்ற 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பல ரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள் ளது. அவர்களை மிகப்பெரிய கடனா ளியாகவும் மாற்றியுள்ளது. பாதிக்கப் பட்ட பொதுமக்கள் தங்களின் முத லீட்டையும் திரும்பப் பெற முடியாமல், வங்கிகளில் வாங்கிய கடனுக்கான இஎம்ஐ எனப்படும் தவணைத் தொகை யையும் செலுத்த முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செல்வகுமார் நாடார் தனது மோசடி க்கு பெரும்பாலும், மாதந்தோறும் பல லட்சங்களை சம்பளமாகப் பெறும் ஐ.டி. துறை ஊழியர்களையே குறிவைத்து வலையில் வீழ்த்தியுள்ளார். தற்போது அவர்களில் பலர், திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு கடனாளியாகி நிற்கின்றனர்.  பிரபாத் ரஞ்சனையே எடுத்துக் கொண்டால், அவரும் அவரது மனைவி யும் கூட்டாக மாதம் ரூ. 2 லட்சம் சம்பா தித்து வந்தார்கள். அவரின் பெயரில் ரூ.1 கோடியே 10 லட்சம் கடன் உள்ளது. இதற்கு இ.எம்.ஐ.யாக மாதம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும். இதில் ரஞ்சனுக்குத் தற்போது வேலையும் போய்விட்டது. இந்நிலையில் வாங்கிய கடனை செல்வகுமார் நாடாரின் ‘அஷ்டவிநா யக் இன்வெஸ்ட்மெண்ட்’டில் தொலைத்து விட்டு, வங்கிகளுக்கு எப்படி திருப்பிச் செலுத்துவது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். இதுதான் 200-க்கும் மேற்பட்டோரின் கதையாகவும் உள்ளது.