states

img

“மார்னிங் கன்சல்ட்” நடத்திய கருத்துக் கணிப்பு பார்த்தீங்களா..?

l    நான்தான் மோடி பேசறேன்.. ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு பார்த்தீங்களா..? பார்க்கலியா? உங்களுக்குக் கண் இருந்து என்ன பிரயோசனம்? இந்திய மக்கள்லே 78 சதவீதம் பேர் எனக்கு ஆதரவா இருக்காங்கன்னு அந்தக் கணிப்பு அறிவிச்சிருக்கு.. !  மார்னிங் கன்சல்ட் எனக்கு வேண்டிய கம்பெனிதான்னு ஊகிச்சுருப்பீங்களே? 2024-க்கு முன்னாலே இந்த மாதிரி நிறைய கருத்துக் கணிப்புகளை வெளியிடறதா இருக்கேன்.. அசந்து போகப் போறீங்க. 2047 வரை நான்தான் உங்களோட பி.எம்.. ! அதுக்குப் பிறகும் நான்தான்.. அதை இப்ப சொல்ல வேண்டாம்னு பார்க்கறேன். மோகன் பகவத் ஜீ கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உங்க கிட்ட சொல்லலாம்னு நெனக்கறேன். இந்தியாவை யார் காப்பாத்தப் போறாங்களோன்னு முணுமுணுக்கறீங்க.. சத்தமாப் பேசிட வேண்டாம். முணுமுணுக்கறதோட நிறுத்திக்குங்க..!

l    மக்களவை, மாநிலங்களவைகள்லே எதிர்க்கட்சிக் காரங்க ரகளை பண்றாங்க.. அதானி..அதானின்னு கூச்சல் போடறாங்க.. அவங்களை “ஆராம் சே பைட்டியே” ன்னு ஓம் பிர்லா சொல்லிப் பார்க்கறாரு. கேட்க மாட்டேங்கறாங்க. எங்க ஆட்கள் சும்மா இருப்பாங்களா? மோடி..மோடின்னு பதிலுக்கு கூச்சல் போடறாங்க. எதிர்க்கட்சிக்காரங்க கேட்கற எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாம மணிக்கணக்கா பேசறது எப்படின்னு எனக்குத் தெரியும். மன் கீ பாத்லே பேசற மாதிரி மாதாமாதம் எங்க ஆட்களுக்கு இது பத்தி வகுப்பு எடுக்கலாமான்னு பார்க்கறேன்.

l    பாஜக ஆட்சியிலே வடகிழக்கிலே வன்முறை 90 சதம் குறைஞ்சுட்டுது.. வடமாநிலங்கள்லே 85 சதம் குறைஞ்சுட்டுது.. உருப்படாம போறது தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள்தான். நிதி வேணும், வேலை வேணும்னு கேட்டு பேரணி போறது..  மறியல் பண்றது.. ஆர்ப்பாட்டம் பண்றதுனு டயத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்காங்க..  இதையெல்லாம் நாங்க கண்டுக்கவே மாட்டோம்னு இவங்க எப்பதான் புரிஞ்சுக்கப் போறாங்களோ?

l   விக்டோரியா கவுரி பாஜகவுக்கு மிகவும் நெருக்க மானவர். அவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியா நியமிச்சுட்டோம். அயோத்தி வழக்கிலே எங்களுக்கு ஆதரவா தீர்ப்பு சொன்ன அப்துல் நசீரை ஆந்திரா கவர்னரா நியமிச்சுட்டோம். இதை யெல்லாம் நீதிபதிகளா இருக்கறவங்க நல்லாப் புரிஞ்சுக்கிட்டாங்க. அதே மாதிரி எங்களுக்கு எதிரா  தீர்ப்பு சொன்னா, அவங்க சேப்டர் குளோஸ்ங்கறதை யும் பளிச்சுனு தெரிவிச்சுட்டோம். நாட்டு நடப்பைப் பார்த்து அவங்களா சுயமாக் கத்துக்கலைன்னா அவங்க நீதிபதியா இருந்து என்னத்தை குப்பை கொட்டினாங்களோ தெரியலை. ஊடகங்கள் எப்படி நடந்துக்கணும்கறதை கத்துக் குடுத்துட்டோம் பார்த்தீங்களா? அதுமாதிரிதான் இதுவும்.. !

l    இந்தியாவிலே இஸ்லாமிய எதிர்ப்பு மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்குன்னு பிபிசி சொல்லலாம்.. நோம் சோஸ்க்கி சொல்லலாம்.. 2002-லே நடந்ததை இத்தனை வருஷங்களுக்கப்பறம் தோண்டியெடுத்து பிபிசி மக்களுக்கு நினைவுபடுத்திக்கிட்டிருக்கு. உச்சநீதிமன்றமே அதையெல்லாம் மறந்துருங்கன்னு சொல்லியாச்சு. மத்தவங்களுக்கு நாங்க ஏன் பதில் சொல்லணும்..? நான் விஸ்வகுருங்கறதை ஞாபகம் வச்சிக்கிட்டுப் பேசுங்க.. !

l திரிபுராவிலே, நாகலாந்திலே, மேகாலயாவிலே தேர்தல் நடந்திருக்கு. வேறு மாநிலங்கள்லே தேர்தல் நடக்கலாம். யார் வேணா ஜெயிக்கலாம். எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை ஹோல்சேலா வாங்கற அளவுக்கு எங்ககிட்ட பணம் கொட்டிக் கிடக்கு. கார்ப்பரேட்  கனவான்கள் எங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் கொட்டிக் கொடுக்கத் தயாரா இருக்காங்க.. அப்பறம் எங்களுக்கு என்ன கவலை?