states

img

ஆந்திராவில் கோர விபத்து : 6 பேர் பலி

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட் டத்திற்குட்பட்ட சீதனப்பள்ளி அருகே உள்ள நெடுஞ்சாலை யில் இறால் பண்ணை க்கு தீவனம் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியும், கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் இரு வாகனங்க ளின் ஓட்டுநர்கள், கூலித்தொழிலாளர்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் கவலைக் கிடமான நிலையில் மசூலிப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.