states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

திங்கள்கிழமை (மே 26) வரை கொல்லம் மற்றும் ஆலப்புழா கடற் கரைகளில் 39 கண்டெய்னர்கள் கரை ஒதுங்கியுள்ளன. திருவனந்தபுரம், வர்க்கலா, பாபநாசம் கடற்கரை, எடவ மந்த்ரா பகுதி மற்றும் அஞ்சுதெங்கு, முத லப்பொழிவு தாழம்பள்ளி பகுதி ஆகிய இடங்களிலும் கண்டெய்னர்கள் கரை ஒதுங்கி உள்ளன. கண்டெய்னர்களில் உள்ள பொருட்களுக்கு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டது போல் இறக்குமதி வரி விதிக்க சுங்கத்துறை முடிவு செய்துள்ளது. கப்பலின் உரிமை யாளர் வரியை செலுத்தி பொருட்களை கைப்பற்ற வேண்டும். இல்லையெனில், அவை பறிமுதல் செய்யப்படும் என்று சுங்கத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டம் நிலைமையை மதிப்பிட் டது. கடற்கரையோர குடியிருப்பாளர் கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கூட்டத்தில் அறிவுறுத்தப் பட்டது. கொல்லம் கடற்கரையில் 35 கண்டெய்னர்கள் கரை ஒதுங்கியுள்ளன. திருமுல்லாவரம் கோவில் அருகே தரை யில் இரண்டு கண்டெய்னர்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 7 கண்டெய்னர்களில் தேநீர், சீன தேநீர் பைகள், காகிதம் மற்றும் பருத்தி ஆகியவை இருந்தன. மீத முள்ள கண்டெய்னர்கள் காலியாக உள்ளன. அதே போல திங்கள்கிழமை காலை 6 மணியளவில் ஆலப்புழாவில் உள்ள ஆராட்டுப்புழா தாரையில் கடவில் கரையில் இரண்டு கண்டெய்னர் கரை ஒதுங்கின. அதில் பச்சை பருத்தி இருந் தது. கப்பலில் இருந்து சிந்திய எண் ணெய்யை அழிக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. கப்பலில் உள்ள 643 கண்டெய்னர்கள், 13 கண்டெய்னர்கள் ஆபத்தான பொருட்கள் உள்ளன.  கால்சியம் கார்பைடு என்ற ரசாயனம் உள்ளது, இது தண்ணீரில் கலந்தால் தீப்பிடித்து தீக்காயங்களை ஏற்படுத்தும். கப்பல் விபத்துக்குள்ளான இடத்தி லிருந்து 20 கடல் மைல்களுக்குள் யாரும் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது. கடலோர காவல்படை, துறைமுகத் துறை மற்றும் கடற்படைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார். கண்டெய்னர்கள் கவிழ்வ தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து ஆராய உயர் மட்டக் கூட்டத்தை சுகாதா ரத் துறை கூட்டியுள்ளது.

சிங்கப்பூரில் இந்திய அனைத்துக் கட்சிக் குழு

பஹல்காம் பயங்கரவாத தாக்கு தல் மற்றும் ஆபரேசன் சிந்தூர் தொ டர்பாக விளக்கம் அளிக்க இந்திய அரசின் அனைத்துக் கட்சிக்குழு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா  தளம் கட்சி எம்.பி. சஞ்சய் குமார் ஜா  தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் இடம் பெற்றுள்ள  3ஆவது குழு சிங்கப்பூருக்குச் சென்றுள் ளது. செவ்வாய்க்கிழமையன்று அந் நாட்டின் வெளியுறவு மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் சிம் ஆனிடம் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு, பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.

ஹரியானா : காரில்  7 பேர் சடலமாக மீட்பு

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா வின் செக்டார் 27இல் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் கார் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப் பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த குடி யிருப்பு வாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காரின் ஜன்னலை உடைத்து காவல்துறை யினர் மேற்கொண்ட சோதனையில் 7 பேர் மயக்க நிலையில் இருந்தனர். உட னடியாக காவல்துறையினர் 7 பேரையும் ஓஜாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவர்கள் 7 பேரும் உயிரிழந்துவிட்டனர் என கூறி யுள்ளனர். இதனையடுத்து காவல்துறை யினர் 7 உடல்களையும் உடற்கூறாய்வுக் காக பஞ்ச்குலா அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்துள்ளனர். பலியான 7 பேரும் ஒரே குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் (40 வயது மதிக் கத்தக்க ஒரு தம்பதியினர், 3 குழந்தை கள், 2 முதியவர்கள்) என்றும், அவர்கள் உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் பகு தியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல் துறையினர் விசாரணை மூலம் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் காரில் தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எல்டிஎப்-இன் முன்னேற்றம் மூன்றாவது அரசாங்கத்தின் தொடக்கமாக இருக்கும்

நிலம்பூர் இடைத்தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் (எல்டிஎப்) பெறும் முன்னேற்றம், மூன்றாவது எல்டிஎப் அரசாங்கத்தின் தொ டக்கமாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலா ளர் எம்.வி. கோவிந் தன் கூறினார். கண்ணூரில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது”நிலம்பூர் சட்ட மன்ற இடைத்தேர்தல் வெற்றியும் உள்ளா ட்சித் தேர்தல் வெற்றியும் மூன்றாவது பதவிக்காலத்திற்கான பயணத்தில் இணைக்கப்படும். நிலம்பூரில் எல்டிஎப் வலுவாக போட்டியிட உள்ளது. வேட்பா ளர் ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படு வார். இடைத்தேர்தல்கள் நிர்வாகத்தின் மதிப்பீடு அல்ல. என்றாலும் எல்டிஎப் அரசு குறித்து மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. அது தேர்தல்களில் பிரதி பலிக்கும். யுடிஎப் முழுமையான சரிவில் உள்ளது. பலர் முதலமைச்சராக போட்டி யிடுகிறார்கள், யாரும் முதலமைச்சரா கப் போவதில்லை என்று முன்னாள் கே. பி.சி.சி தலைவர் கே. சுதாகரன் கூறினார். கேரளாவில் எல்டிஎப் மட்டுமே சாத்தியம் என்று அனைத்து தரப்பு மக்களும் மதிப் பிடுகின்றனர். எம்.வி. கோவிந்தன் கூறினார்.