பாட்னா, அக்.1- சானிட்டரி நாப்கின் கேட்டதால் ஐஏஎஸ் அதிகாரியால் அவமரியாதை செய்யப்பட்ட பீகார் மாணவிக்கு, பாராட்டுகளுடன், தற்போது உதவிக் கரங்களும் நீளத் துவங்கியுள்ளன. பீகார் மாநில மகளிர் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், “அதி காரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்” என்ற தலைப்பில் அண்மையில் கருத்த ரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர் ஜோத் கவுர் பம்ரா கலந்து கொண்டு மாண விகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரியா குமாரி என்ற மாணவி, அரசாங்கம் தங்களுக்கு சானிட்டரி நாப்கின் களை இலவசமாக வழங்க வேண்டும் என்று கேட்டபோது, “இதுபோன்ற கோரிக் கைகளுக்கு முடிவு உண்டா? நாளைக்கு ஜீன்ஸ் பேண்டும், அழகான காலணிகளும் கேட்பீர்கள். இறுதியாக குடும்ப கட்டுப் பாட்டு முறைக்கு அரசு ஆணுறைகளையும் இலவசமாக வழங்க வேண்டும் என்பீர்கள்” என்று கூறி அந்த மாணவியை அவமானப் படுத்தினார். இந்த விவகாரத்தில், ஐஏஎஸ் அதிகாரி யின் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்ட னங்கள் எழுந்தன. தேசிய மகளிர் ஆணை யம் பம்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. முதல்வர் நிதிஷ்குமாரும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு, அதிகாரி பம்ரா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
இதனிடையே, தான் அவமானப் படுத்தப்பட்டது குறித்து பேட்டி அளித்த மாணவி ரியா குமாரி, “எனது கேள்வியில் எந்த தவறும் இல்லை. என்னால், நாப்கினை வாங்க முடியும். ஆனால், குடிசைகளில் வாழு பவர்களால் வாங்க முடியாது. நான் எனக் காக மட்டும் கேட்கவில்லை. அனைத்து மாணவிகளுக்காகவும்தான் கேட்டேன். நாங்கள் கோரிக்கை வைக்கத்தான் சென்றோம், சண்டையிட அல்ல” என்று தனது நிலைப்பாட்டில் மீண்டும் உறுதி காட்டினார். இதனால் மாணவி ரியாவுக்கு மேலும் பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், அவருக்கு தற்போது உதவிகளும் வரத் துவங்கியுள்ளன. இந்தியத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று மாணவி ரியாவுக்கு ஓராண்டுக்கான சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது. தில்லியை தலைமையிடமாகக் கொண்ட ‘வெட் அண்ட் டிரை பெர்சனல் கேர்’ என்ற அந்த சுகாதார நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஓம் தியாகி, “பி.ஏ. படிக்கும் பீகார் இளம்பெண், பொது இடத்தில் ஏழைப் பெண்களின் பிரச்சனை யை எடுத்துரைத்த துணிச்சலுக்காக அவ ருக்கு வெகுமதி அளிப்பதாகக் கூறி யுள்ளார்.” மேலும், பீகார் பெண்ணின் படிப்புக்கான செலவுகளை நிறுவனமே ஏற்க முடிவு செய்துள்ளதாக கூறியிருக்கும் அவர், “எதிர்காலத்தில், ரியா குமாரி வேறு ஏதா வது உதவியை விரும்பினாலும், அவரு டைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்து வதற்கு நாங்கள் உதவி செய்வோம்” என்று அறிவித்துள்ளார்.