states

img

எம்.பி., எம்எல்ஏக்களின் வெறுப்பு பேச்சு பாஜக முதலிடம் ஏடிஆர் ஆய்வறிக்கையில் தகவல்

நாட்டில் உள்ள எம்.பி., எம்எல்ஏ.,க்களின் மொத்த எண்ணிக்கை 4768 ஆகும். இதில் எம்.பி.,க்களின் எண்ணிக்கை 763 ஆகவும், எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4,007 ஆகவும் உள்ளது. 

இந்நிலையில், எம்.பி.,  எம்எல்ஏ.,க்களின் வெறுப்புப் பேச்சு தொடர்பாக ஜனநாயக  சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்  ளது. அந்த அறிக்கையில் மொத்  தம் உள்ள 4,768 எம்.பி.,க்கள்  மற்றும் எம்.எல்.ஏ.,க்களில், 107  பேர் மீது வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் உள் ளன எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஏடிஆர் அறிக்கையில் பாஜக எம்.பி., எம்எல்ஏ.,க்கள் முதலிடத்தில் உள்ளனர்.  நாடாளுமன்றத்தில் உள்ள 763 எம்.பி.,க்களில், 33 எம்.பி.,க்கள் மீது வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக பாஜகவைச் சேர்ந்த 22 எம்.பி.,க்கள் மீது வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்குகள் உள்ளன.  அதே போல மொத்தம் உள்ள  4,005 எம்எல்ஏ.,க்களில் 74 பேர்  மீது வெறுப்புப் பேச்சு வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் அதிகபட்ச மாக பாஜகவைச் சேர்ந்த 20 எம்எல்ஏ.,க்களில் வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்குகள் உள்ளன. பாஜக எம்எல்ஏ மீது  43 வழக்கு அதிகபட்சமாக தெலுங்கா னாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ  டி.ராஜா சிங் மீது வெறுப்புப் பேச்சு தொடர்பான அதிக வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏடிஆர் அறிக்கை யின் படி சிங்குக்கு எதிராக மொத்  தம் 43 வழக்குகள் பதிவு செய்யப்  பட்டுள்ளன. 43 வழக்குகளில், 27 வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டு, 16 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் இது நாள் வரை அவர் எந்த ஒரு  வழக்கிலும் தண்டனை பெற வில்லை என்பது குறிப்பிடத்தக் கது. ஒன்றிய அமைச்சர்  அமித் ஷா ஏடிஆர் அறிக்கையில் பிரத மர் மோடியின் நெருங்கிய நண்ப ரும், ஒன்றிய உள்துறை அமைச்ச ருமான அமித் ஷா மீது 4 வெறுப்  புப் பேச்சு வழக்குகள் உள்ளன.