states

img

தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றார்

தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றார்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் ஆணையரை முடிவு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் தில்லியில் பிப்ரவரி 17ஆம் தேதி நடை பெற்றது.   பிரதமர் மோடி, ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், கடந்த ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஞானேஷ் குமார் புதிய தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழு மற்றும் அதன் செயல்முறை குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதால் 48 மணி நேரம் காத்திருந்து முடிவெ டுக்க வேண்டுமென கூட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தியது ஏற்றுக் கொள்ளப் படவில்லை. பிப்ரவரி 17ஆம் தேதி நள்ளி ரவு புதிய தலைமை தேர்தல் ஆணை யராக ஞானேஷ் குமார் நியமிக்கப்படு வதாக ஜனாதிபதி முர்மு முறைப்படி அறிவித்தார். இந்நிலையில், நாட்டின் 26ஆவது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் புதன்கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டார்.

2029ஆம் ஆண்டு ஜனவரி 26 வரை தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவி வகிப்பார். இவரது பதவிக்காலத்தில் இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநி லங்களின் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.  மேலும் 2027ஆம் ஆண்டு குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் தேர்தல்களையும் ஞானேஷ்குமார் நடத்துவார். 2029ஆம் ஆண்டு நடை பெறும்  நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்ப தற்கு சில நாட்களுக்கு முன்பு ஞானேஷ்  குமார் ஓய்வு பெறுவார் என்பது குறிப் பிடத்தக்கது.