அகமதாபாத், ஜுன் 11 - பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற சிறுமியின் 7மாத கருவைக் கலைக்க அனுமதி கோரிய வழக்கில், “மனுஸ்ருமிதி படி யுங்கள்; 14-15 வயது பெண்கள் திருமணம் செய்து 16-17 வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது இயல்பானது” என்று பாலியல் வன்முறையை ஆதரிக்கும் வகையில் குஜராத் நீதிபதி சமீர் தேவ் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். கருக்கலைப்பு சட்டத்தின் படி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் களின் கருவை 24 வாரங்களுக்குப் பிறகும் கலைக்கலாம் என்பதால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கருக்கலைப்பிற்கு அனுமதி கோரியிருந்தார். இந்த வழக்கில் சிறுமியின் உடல்நிலை, மனநிலை குறித்தான அறிக்கையை ஜூன் 15 அன்று சமர்ப்பிக்கும்படி ராஜ்கோட் மருத்துவமனை மருத்துவர்களுக்கு உத்தர விட்ட நீதிபதி, கருவின் வளர்ச்சி நன்றாக இருந்தால் கருவைக் கலைக்க உத்தரவிட முடியாது என்றும், உங்கள் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள் - அவர்கள் 16-17வயதில் குழந்தை பெற்றுள்ளார்கள் என்று அந்த வழக்கு முழுவதும் மனு ஸ்ருமிதியை மேற்கோள் காட்டி முற்றிலும் சர்ச்சைக்குரிய வகையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் முன்னிலையிலேயே பேசி யுள்ளார். நீதிபதி சமீர் தேவ்வின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.