states

img

மானந்தவாடி பால் கூட்டுறவு சங்கத்திற்கு கோபால் ரத்னா விருது

புதுதில்லி, நவ.24- நாட்டிலேயே சிறந்த பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்திற்கான இந்த ஆண்டுக்கான கோபால் ரத்னா விருது கேரளத்தில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி பால் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஒன்றிய மீன்வளத்துறை - கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. முதலிடம் பெற்ற மானந்தவாடி கூட்டுறவு குழுமத்திற்கு ரூ.5 லட்சம், சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்படும். மன்னார்குடி சங்கத்திற்கு மூன்றாம் பரிசு கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த அரகெரே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இரண்டாம் இடத்தைப் பிடித்து ரூ.3 லட்சம் பரிசுத்தொகையை பெற்றுள்ளது. தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்குடி எம்.பி.சி. மூன்றாம் இடத்தைப் பிடித்து ரூ.2 லட்சம் பரிசுத் தொகையை பெற்றுள்ளது. நவம்பர் 26-ஆம் தேதி பால் தின விழாவின் ஒரு பகுதியாக பெங்களூரு ஜி.கே.வி.கே. வளாகத்தில் டாக்டர்.பாபு ராஜேந்திர பிரசாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் இந்த விருது வழங்கப்படும். ஹரியானா மாநிலம் பதேஹாபாத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சிக் சிறந்த பால் பண்ணையாளர். சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுனருக்கான விருதை ஒடிசா மாநிலம் பலங்கிரைச் சேர்ந்த கோபால் ராணா பெற உள்ளார். கோபால் ரத்னா என்பது பால்வளத் துறையின் தேசிய விருதுகளில் ஒன்றாகும்.