புதுதில்லி, ஏப்.5- உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பில் லாத முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா வும் ஒன்று என அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பெண் பயணிகளுக்கு எந்த நாடுகள் மிக வும் ஆபத்தானவை என்பதை தீர்மானிக்கும் முயற்சியில், ஊடகத்துறை தம்பதிகளான ஆஷர் மற்றும் லிரிக் பெர்குசன் ஆகியோர் விரி வான ஆய்வு ஒன்றை நடத்தி, மிகவும் பிரபல மான 50 சுற்றுலா நாடுகளை வரிசைப்படுத்தி யுள்ளனர். அதாவது, வீதிகளில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு, வேண்டுமென்றே படு கொலை செய்யப்படுதல், கணவர் அல்லாத வர்கள் மூலமான பாலியல் வன்முறை, கண வர் மற்றும் நெருங்கியவர்கள் மூலமான பாலி யல் வன்முறை, சட்டரீதியான பாகுபாடு, உலக ளாவிய பாலின இடைவெளி, பாலின சமத்துவ மின்மை ஆகிய குறியீடுகளை அடிப்படை யாகக் கொண்டு இந்த 50 நாடுகளையும் வரி சைப்படுத்தியுள்ளனர். மேலும், வரிசைப்படுத் துதலில் பெண்களுக்கு ஆபத்தான முதல் 10 நாடுகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ள னர்.
இந்தப் பட்டியலில்தான், பெண்களுக்கான மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இந் தியா 9-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தென் னாப்பிரிக்கா ஆகும். தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரிக்கா உள்ள தாக கூறப்பட்டுள்ளது. இரவில் தனியாக செல்வதை 25 சதவிகிதம் பேர் மட்டுமே பாது காப்பாக உணர்கின்றனர். இங்கு 40 சதவிகி தத்திற்கும் அதிகமான பெண்கள் அவர்களின் வாழ்நாளில் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்கின்றனர். கூடுதலாக, பெண்களை வேண்டுமென்றே படுகொலை செய்வதிலும் தென்னாப்பிரிக்கா மோசமான தரவரிசையில் உள்ளது. குறியீட்டில் “எப்” பெற்ற ஒரே நாடாக தென்னாப்பிரிக்கா உள்ளது. பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 28 சதவிகிதம் பெண்கள் மட்டுமே இரவில் தனியாகச் செல்வதை பாதுகாப்பாக உணர்கின்றனர். பெண்களுக்கு எதிரான வேண்டுமென்றே நடக்கும் கொலைகள் விகி தத்தில் மூன்றாவது இடத்தில் பிரேசில் உள் ளது. மேலும், இங்குள்ள பெண்களில் 36.9 சத விகிதம் பேர், தங்கள் நெருங்கிய கூட்டாளி களிடமிருந்து உடல் அல்லது பாலியல் வன் முறையை சந்திக்கின்றனர். இதில், உலகள வில் பிரேசில் 6-ஆவது இடத்தை வகிக்கி றது.
பெண்களுக்கு எதிராக வேண்டுமென்றே நடத்தப்படும் கொலைகளில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் ரஷ்யா, பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. ரஷ்யாவுக்கு அடுத்த நான்காவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. மெக்ஸிகோவில் சுமார் 33 சதவிகிதம் பெண் கள் மட்டுமே இரவில் தனியாக நடப்பதை பாதுகாப்பாக உணர்கின்றனர். கூடுதலாக, கணவர் அல்லாதவர்கள் மூலமான பாலியல் வன்முறையில் மெக்ஸிகோ மூன்றாவது இடத்தில் உள்ளது. சுமார் 16 சதவிகிதம் பெண் கள் பாலியல் வன்முறையைச் சந்திக்கின்ற னர். உலக அளவில் பாலின இடைவெளியில் முதல் இடத்தைப் பிடிக்கும் ஈரான், பெண் களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டி யலில் 5-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார பங்கேற்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரமளித்தல் ஆகிய வற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், பெண்களுக்கு எதிரான சட்டரீதியான பாகுபாடுகளில் ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பெண்களுக்கு எதிரான திட்டமிட்ட கொலை களிலும், இரவில் தனியாக செல்வதை பாது காப்பாக உணர்வதிலும் உலகளவில் ஐந்தா வது இடத்தை (33 சதவிகிதம்) வகிக்கும் டொமினிகன் குடியரசு, பெண்களுக்கு ஆபத் தான நாடுகளின் பட்டியலில் 6-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பெண் பயணிகளுக்கு மிகவும் ஆபத்தான ஏழாவது நாடாக எகிப்து வரிசைப்படுத்தப் பட்டு உள்ளது. இங்கு 47 சதவிகிதம் பெண்கள் மட்டுமே இரவில் தனியாக நடப்பதை பாது காப்பாக உணர்கிறார்கள். எகிப்து நான்கா வது உலக பாலின இடைவெளியையும், ஏழா வது மிக உயர்ந்த பாலின சமத்துவமின்மையை யும் கொண்டுள்ளது. இதேபோல மொராக்கோ நாட்டுப் பெண் களில் சுமார் 45 சதவிகிதம் பேர் தங்கள் நெருங் கிய துணையிடமிருந்து உடல் அல்லது பாலி யல் ரீதியான வன்முறையை அனுபவிக்கின்ற னர். மோசமான நாடுகளில் பட்டியலில் மொராக்கோ 8-ஆவது இடத்தை வகிக்கிறது.
இந்த வரிசையில்தான் பெண் பயணி களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் இந் தியா 9-ஆவது இடத்தைப் இடம்பெற்றுள்ளது. கணவர் அல்லது நெருக்கமான நபர்கள் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் வன் முறையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. 37.2 சதவிகிதம் பெண்கள் வன் முறைக்கு உள்ளாகின்றனர். இதுதவிர பாலின சமத்துவமின்மை குறியீட்டில் உலக ளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தி யாவில் பெண்கள் மீதான வன்முறையை சுமார் 45 சதவிகிதம் பேர் நியாயப்படுத்தும் நிலைமை உள்ளது. இந்தியாவுக்கு அடுத்து, பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் பட்டியலில் பத்தாவது இடத்தில் தாய்லாந்து உள்ளது. கணவர் அல்லது நெருக்கமான நபர் மூல மான வன்முறையில் தாய்லாந்து இரண்டா வது இடத்தில் உள்ளது. சுமார் 44 சதவிகிதம் வன்முறைக்கு உள்ளாகின்றனர். மறுபுறத்தில், ஸ்பெயின், சிங்கப்பூர், அயர் லாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், குரோஷியா, கனடா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் பெண்களுக்கு பாது காப்பான 10 நாடுகள் என தரவரிசைப் படுத்தப்பட்டு உள்ளன.