states

கர்நாடகத்தில் பாஜக தலைவர்களால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் தொழிலதிபர்கள்!

ராமநகர், ஜன. 3 - கர்நாடக பாஜக ஆட்சியில், அனைத்து வகையிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. ஆட்சி முடிவடையும் தருவாயில், பாஜக  அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அடிக்கும் கொள்ளைக்கு சாமானியர் முதல் பெரு முதலாளிகள் வரை யாரும் தப்ப முடிய வில்லை என்ற அவலம் கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்தபோதே, ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆரம்பித்து விட்டன. “கர்நாடக பாஜக ஆட்சியில், எந்தத் திட்ட த்தை எடுத்தாலும் 15 சதவிகித ‘கமிஷன்’ கொடுத்தால்தான் காரியம் நடக்கிறது; இதன் மூலம் ஒவ்வொரு நாளும் பல  கோடிரூபாய் ஊழல் நடக்கிறது” என்று  பாஜக எம்எல்ஏ-க்களே 7 பேர், பகிரங்க மாக குற்றச்சாட்டு எழுப்பினர். குறிப்பாக, ‘கமிஷன்’ தொகையை வசூலிக்க மட்டும் 31 பேர்கொண்ட குழுவை, முதல்வர் எடி யூரப்பாவின் மகன் விஜயேந்திரா நிய மித்திருப்பதாக அவர்கள் கூறினர். இதுதொடர்பாக, பாஜக தலைமைக்கு 6 பக்க கடிதத்தை கூட்டாக எழுதிய அந்த  7 எம்எல்ஏ-க்களும், “காங்கிரஸ் ஆட்சியின் போது, மாநிலத்தின் அனைத்து திட்டங்களி லும் சித்தராமையா அரசு 10 சதவிகிதம் கமிஷன் எடுத்துக் கொண்டதாக பிரதமர் மோடி  குற்றம் சாட்டினார்; ஆனால், தற்போதைய கர்நாடக பாஜக அரசாங்கம் 15 சதவிகிதம் ‘விஎஸ்டி - விஜயேந்திர சேவை வரி’ வசூலிக்கிறது என்று குறிப்பிட்டனர். 

ஒருகட்டத்தில் எடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், பதவி பறிபோவதற்கு 3 நாட்கள் முன்ன தாகக் கூட, பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்தில் ஊழல் செய்த குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா உள்ளானார். பின்னர் பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக்கப்பட்டார். ஆனால், முன்பை விடவும் ஊழல் வேகமெடுத்ததே தவிர, குறையவில்லை.  கர்நாடக அரசுக் கல்வித்துறையின் அனைத்து மட்டங்களிலும், லஞ்ச - ஊழல் முறைகேடுகள் மலிந்துவிட்டதாக 13 ஆயிரம் பள்ளிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் 2 சங்கங்கள், கடந்த 2022-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் பகிரங்கமாக குற்றம் சாட்டின. பிரதமர் நரேந்திர மோடிக்கே நேரடியாக தங்களின் புகாரை அனுப்பி வைத்தன.  “லாப நோக்கில் இயங்கும் பெரிய பள்ளிகளுக்கு அனுமதி அளித்து இரண்டு வெவ்வேறு பாஜக அமைச்சர்கள் கல்வியை வணிகமயமாக்கி விட்டனர். ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் நிலவு கிறது. பள்ளி அங்கீகாரச் சான்றிதழ் வழங்கு வதற்குக் கூட மாநில கல்வித்துறை லஞ்சம் கேட்கிறது” என்று இந்த சங்கங்கள் குற்றம் சாட்டியிருந்தன. “பிரதமர் மோடி  இதில் நேரடியாக தலையிட்டு விசாரணை  நடத்த வேண்டும்” என்று கர்நாடக  மாநில தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ் மெண்ட்கள் (கே.ஏ.எம்.எஸ்.) மற்றும் பதிவு செய்யப்பட்ட உதவிபெறாத தனியார் பள்ளிகள் மேலாண்மை சங்கம் ஆகியவை மோடியிடம் புகார் தெரிவித்தன. ஆனால், பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2022 ஏப்ரலில், கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் இந்தலகா  பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் (40) தனியார் விடுதியொன்றில் விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டார். காரணம் பாஜக அமைச்சர் கேட்ட லஞ்சம். அமைச்சர் கேட்ட லஞ்சத்தை கொடுக்க  முடியாததால், இவருக்குச் சேரவேண்டிய பல கோடி மதிப்பிலான பணம் கையை விட்டுப் போனது, கடன்பட்டார். வட்டி கட்ட முடியாத நிலையில், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டார். 

இவ்வளவிற்கும் இவர், ‘ஹிந்து யுவ வாஹினி’ என்ற சங்- பரிவார் அமைப்பின் தேசியச் செயலாளராக இருந்து வந்தவர். அந்த செல்வாக்கு மூலமாக, அரசுத் துறைகள் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தார். குறிப்பாக, பெலகாவியில் ரூ. 4 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் காண்ட்ராக்ட்டை எடுத்தார். சாலையும் அமைத்தார். ஆனால், 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருக்கான பில் தொகை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 40 சத விகித கமிஷன் கொடுத்தால் மட்டுமே நிதியை ஒதுக்கீடு செய்வேன் என்று கர்நாடக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கறா ராக கூறிவிட்டார். இதுதொடர்பாக, 2022  மார்ச் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடி  மற்றும் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகி யோருக்கு சந்தோஷ் பாட்டீல் கடிதம் எழுதி னார். அதற்கு எந்த மதிப்பும் இல்லாத நிலையில், ஏப்ரல் மாதத்தில் சந்தோஷ் பாட்டீல் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, சந்தோஷ் பாட்டீலின்  சகோதரர் அளித்த புகாரின் பேரில், பல  நாள் போராட்டத்திற்குப் பின் அமைச்சர்  ஈஸ்வரப்பாவை முதல் குற்றவாளியாக வும், அவருடைய உதவியாளர்கள் இரண்டு  பேரை, 2-ஆவது மற்றும் 3-ஆவது குற்ற வாளியாகவும் சேர்த்து, தற்கொலைக்குத் தூண்டிய பிரிவில் போலீசார் வழக்குப்  பதிவு செய்தனர். அதன்பிறகும் எதிர்க்கட்சி களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே ஈஸ்வரப்பா பதவியை ராஜினாமா செய்தார். இந்த வரிசையில்தான், தற்போது தனது சாவுக்கு பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளியை குற்றம்சாட்டி விட்டு,  2023 ஜனவரி 1 புத்தாண்டு அன்று தொழி லதிபர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகே அமலேபுராவை சேர்ந்தவர் பிரதீப் (47) என்ற இந்த தொழிலதிபர், ராமநகர் மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு புத்தா ண்டு கொண்டாடுவதற்காக குடும்பத்து டன் சென்றிருந்தார். ரிசார்ட்டில் தங்கி யிருந்த பிரதீப் ஜனவரி 1 அன்று காலை யில் திடீரென்று எஸ்.எச்.ஆர். லே-அவுட்டில் உள்ள தனது வீட்டுக்கு தனியாக காரில் வந்தார். பின்னர் சிறிது நேரம் இருந்துவிட்டு மீண்டும் ரிசார்ட்டுக்குப் புறப்பட்ட அவர், கக்கலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நெட்டகெரே பகுதி யில் காரை நிறுத்திவிட்டு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை  நடத்தியபோது, தற்கொலை செய்து கொண்ட பிரதீப்-பின் அருகே கடிதம் ஒன்று இருந்துள்ளது. அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கான காரணங்களை பிரதீப் விரிவாக குறிப்பிட்டுள்ளார். அதில்தான் பாஜக எம்எல்ஏ-வை அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகேயே புதிதாக ரெஸ்டாரண்ட் திறக்க 5 பேர், என்னைச் சந்தித்துப் பேசி  இருந்தனர். அவர்கள் புதிய ரெஸ்டார ண்டில் உங்களையும் ஒரு பங்குதாரராக சேர்ப்பதாகவும், இதற்காக ரூ. 1.5 கோடி கொடுக்குமாறும் கேட்டனர். எனது வீட்டை  விற்றும், கடன் வாங்கியும் ரூ. 1.5 கோடியை கொடுத்தேன். ஆனால் என்னை பங்குதார ராக சேர்க்கவில்லை. பணத்தையும் திருப்பித் தர மறுத்து விட்டனர். அப்போதுதான் பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளியின் உதவியை கேட்டேன். அந்த 5 பேரையும், என்னையும் அழைத்து  சமாதானமாக பேசி, ரெஸ்டாரண்ட் வரு மானத்தில் இருந்து மாதம் ரூ. 1 லட்சம் கொடுக்கும்படி அரவிந்த் லிம்பாவளி கூறிஇருந்தார். அதன்படி, 9 மாதங்கள் தலா ரூ. 1 லட்சம் கொடுத்தனர். அதன்பிறகு, பணம் கொடுக்கவில்லை. என்னை பங்குதாரராகவும் சேர்க்கவில்லை. அரவிந்த் லிம்பாவளியிடம்  இருந்தும் சரி யான பதில் வரவில்லை. ஒட்டு மொத்த மாக ரெஸ்டாரண்டில் பங்குதாரர் ஆக்குவ தாக கூறி பணம் வாங்கியதில் ரூ. 2.20 கோடியை இழந்திருந்தேன். எனது சாவுக்கு கோபி, ராகவாபட், சோமய்யா, ரமேஷ் ரெட்டி, ஜெகதீஸ் மற்றும் அரவிந்த் லிம்பாவளியே காரணம்” என்று கடிதத்தில் பிரதீப் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு வர வேண்டிய ரூ. 2.20 கோடியை பெற்று தனது மனைவி மற்றும் மகளிடம் கொடுக்குமாறும் போலீ சாரை பிரதீப் அந்த கடிதத்தில் உருக்க மாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இதை யடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தி யுள்ள கக்கலிபுரா போலீசார், பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளி உட்பட 6 பேர் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க் களின் ஊழல் - மோசடிகளால், சமானி யர்கள் மட்டுமன்றி, தொழிலபதிகளும் கூட தற்கொலை செய்துகொள்ளும் சம்ப வங்கள் கர்நாடகத்தில் அதிகரித்திருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.