states

img

குஜராத் அரசு பதவி உயர்வு வழங்கியது சட்ட விரோதம்

இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுதில்லி, மே 12 -  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யை, கிரிமினல் அவதூறு வழக்கில் குற்ற வாளி என்று தீர்ப்பளித்த சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஹரிஷ் ஹஸ் முக்பாய் வர்மா உட்பட 68 கீழமை நீதிபதி களின் பதவி உயர்வுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. “உயர் நீதிமன்றம் வழங்கிய- பதவி உயர்வு பட்டியல் மற்றும் மாவட்ட நீதிபதி களுக்கு பதவி உயர்வு வழங்கி மாநில அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோத மானது; மேலும், இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணானது” என்று கூறி யிருக்கும் உச்சநீதிமன்றம், “பதவி உயர்வு பட்டியலை நிறுத்தி வைப்ப தாகவும், பதவி உயர்வு பெற்றவர்கள், பதவி உயர்வுக்கு முன் அவர்கள் வகித்து வந்த அசல் பதவிக்கே திரும்பவேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது.

ராகுல் மீதான வழக்கு

2019 மக்களவைத் தேர்தலையொட்டி, அவ்வாண்டு ஏப்ரல் 13 அன்று கர்நாடக மாநிலம் கோலார் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என அனைத்துத் திருடர் களின் பெயர்களிலும் மோடி என்று ஏன்  இருக்கிறது?” என கிண்டலாக கேள்வி எழுப்பியிருந்தார். ராகுலின் இந்தப் பேச்சுக்கு எதிராக, பாஜக எம்எல்ஏ-வும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை விசாரித்த சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிபதி எச்.எச். வர்மா, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 504-இன் கீழ் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து, கடந்த மார்ச் 23 அன்று தீர்ப்பு வழங்கினார். ராகுலுக்கு 2 ஆண்டு கள் சிறைத் தண்டனையும் விதித்தார். இத னால் ராகுலின் எம்.பி. பதவி பறிபோனது மட்டுமன்றி, அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டி போடவே முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

67 பேருக்கு பதவி உயர்வு

இவ்வாறு ராகுலின் அரசியல் வாழ்க் கையையே அஸ்தமிக்கச் செய்யும் வகையிலான தீர்ப்பு வழங்கிய நீதிபதி எச்.எச். வர்மாவுக்கு, குஜராத் பாஜக அரசா னது, ராஜ்கோட் மாவட்ட கூடுதல் நீதிபதி யாக பதவி உயர்வு வழங்கியது. இவரு டன் மேலும் 67 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த பதவி உயர்வு களானது, விதிமுறைகளை மீறி வழங்கப் பட்டுள்ளதாக, குடிமையியல் நீதிபதி அஸ்தஸ்தில் பணியாற்றும் குஜராத் அர சின் சட்டத் துறையில் துணைச் செயலாள ராகவும், மாநில சட்டப் பணிகளில் உதவி இயக்குநராகவும் பணிபுரியும் ரவிகுமார் மஹேதா மற்றும் பிரதாப்ராய் மேத்தா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தி லும் வழக்கு தொடுத்தனர். “குஜராத் மாவட்ட நீதிபதிகள் நியமனமானது, 65  சதவிகித இடஒதுக்கீடு மட்டுமல்லாமல், தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படை யிலும், தேர்வில் பெற்ற  மதிப்பெண் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர் களுக்கும் இட ஒதுக்கீடு முறையில் மாவ ட்ட நீதிபதி பதவிகள் வழங்கப்பட உள்ளன. தாங்கள் முறையே  200-க்கு முறையே 135.5 மற்றும் 148.5 மதிப்பெண்கள் பெற்றி ருந்தும், தங்களுக்கும் குறைவான மதிப் பெண் பெற்றவர்கள் மாவட்ட நீதிபதி களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது சட்டவிரோதமானது” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இவர்களின் மனு எம்.ஆர். ஷா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர் வில் கடந்த ஏப்ரல் 13 அன்று விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜ ராத் அரசு  மற்றும் குஜராத் உயர் நீதி மன்றப் பதிவாளர் ஜெனரல் ஆகியோ ருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

உச்சநீதிமன்ற நோட்டீசை மீறி...

ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த  நோட்டீஸையும் மீறி, குஜராத் பாஜக அர சானது, ஏப்ரல் 18 அன்று எச்.எச். வர்மா உள்ளிட்ட 68 பேருக்கும் பதவி  உயர்வு வழங்குவதற்கான அறிவிப்பா ணையையும் வெளியிட்டது. ஏப்ரல் 28 அன்று இந்த வழக்கு மீண்டும் விசா ரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தை மதிக்காமல், குஜராத் பாஜக அரசு மேற் கொண்ட நீதித்துறை நியமனம் பற்றி, மனுதாரர்களான ரவிகுமார் மஹதோ, சச்சின் பிரதாப்ராய் மேத்தா ஆகியோர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.  அப்போது, “பதவி உயர்வு விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ஏப்ரல் 18 அன்று 68 நீதிமன்ற அலுவலர்களுக்கு குஜராத் அரசு பதவி உயர்வு அளித்துள்ளது. இந்தப் பதவி உயர்வு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அப்படியானால், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள விஷ யங்களை தெரிந்து கொண்ட பிறகே, குஜ ராத் அரசு இந்தப் பதவி உயர்வை வழங்கி யுள்ளது” என்று தெரிவித்த நீதிபதிகள், “2022-இல்தான் இதற்கான தேர்வு நடை பெற்றுள்ளதால், பதவி உயர்வில் அதீத மான அவசரம் காட்ட வேண்டிய தேவை  என்ன? பதவி உயர்வு குறித்த அறி விப்பை குஜராத் அரசு இவ்வளவு அவ சரம் அவசரமாக அறிவிக்கிறது என்றால், இது நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் நடவடிக்கையன்றி வேறில்லை என்று நாங்கள் கருதுகிறோம். நீதிமன்ற நடை முறைகளை மீறும் அளவிற்கு குஜராத் சட்டத்துறைச் செயலாளர் அவ்வளவு மிகப் பெரிய நபரா?” என்று கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், “பணி மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுமா? என்பது பற்றி குஜராத் மாநில அரசு செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இடைக்கால உத்தரவு

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர். ஷா, சி.டி. ரவிக்குமார் ஆகி யோர் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, “68 நீதித்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான உத்த ரவு, 2011-ல் திருத்தப்பட்ட குஜராத் மாநில நீதித்துறை சேவை விதிகள் 2005-ஐ மீறுவதாக உள்ளது” என்று அறி வித்த நீதிபதிகள், எனவே, ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உள்ளிட்ட குஜ ராத்தின் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 68 பேரின் பதவி உயர்வை நிறுத்தி வைப்ப தாக இடைக்கால உத்தரவுபிறப்பித்தனர். மேலும், “பதவி உயர்வு என்பது தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படை யில் வழங்கப்பட வேண்டும் என்று தெரி வித்த நீதிபதிகள், அதற்கு மாறாக, பதவி உயர்வு அளிக்கும் குஜராத் உயர்நீதிமன் றத்தின் பரிந்துரை மற்றும் குஜராத் அரசு வெளியிட்ட அறிக்கை சட்டவிரோதமா னது; பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட 68  பேரும், அவர்கள் ஏற்கெனவே வகித்து வந்த பதவிக்கே செல்லவேண்டும்” என்றும் உத்தரவிட்டனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எம்.ஆர். ஷா, மே 15-ஆம் தேதி யுடன் ஓய்வு பெறுவதால், அடுத்தகட்ட மாக இந்த வழக்கை உரிய வேறொரு அமர்வு விசாரிக்கவும் பரிந்துரைக்கப் பட்டு உள்ளது.