புதுதில்லி, மே 8- பாஜக எம்.பி.யின் பாலியல் துன் புறுத்தலால் பாதிக்கப்பட்ட மல் யுத்த வீராங்கனைகளின் போராட் டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் களத்தில் இறங்கியுள்ளனர். தில்லியில் போராடும் மல்யுத்த வீரர் - வீராங்கனைகளை நேரில் சந்தித்த விவசாயிகள் சங்கத் தலை வர்கள், பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண்சிங்-கை மே 21-க்குள் கைது செய்தாக வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசுக்கு கெடு விதித்துள்ள னர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு வேறு ஏதேனும் சிக்கலை ஏற்படுத்த முயன்றால், ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்குப் பின்னால் திரளும் என்றும் அறிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி, மல்யுத்த வீரர் - வீராங்கனைகள், தில்லி ஜந்தர் மந்த ரில் 2-ஆம் கட்ட போராட்டத்தைத் துவங்கி நடத்தி வருகின்றனர். இந் தப் போராட்டம் 14 நாட்களைக் கடந் துள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் போராடும் பகுதியில் மின்சாரம், குடி நீர் விநியோகத்தை நிறுத்துவதும், காவல்துறையினரை குடிபோதை யில் அனுப்பி தகராறு செய்வதுமாக ஒன்றிய பாஜக அரசு பல்வேறு இடை யூறுகளையும், அடக்குமுறைகளை யும் ஏவி விட்டாலும், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை, மல்யுத்த கூட்ட மைப்பு தலைவர் பதவியிலிருந்து நீக்கி அவரைக் கைது செய்யும் வரை போராட்டம் நிற்காது என்று மல்யுத்த வீராங்கனைகள் மிகுந்த உறுதி யுடன் போராட்டத்தை முன்னெ டுத்து வருகின்றனர்.
அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம் மேளனம் ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மல்யுத்த வீராங்கனைகளை சனிக்கிழமை யன்று நேரில் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். மாதர் சங்கத்தினரைத் தொட ர்ந்து, மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக தாங்களும் போராட்டத் தில் பங்கேற்கப் போவதாக விவ சாயிகள் அறிவித்தனர். அதன்படி, ராகேஷ் திகாயத் தலைமையிலான ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ அமைப்பை சேர்ந்த விவசாயிகள், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநி லங்களில் இருந்து ஞாயிறன்று தில்லியை நோக்கி புறப்பட்டனர். இதனால், சிங்கு, திக்ரி எல்லை களிலும், நங்லோய் சவுக், பீராகரி சவுக் மற்றும் முண்ட்கா சவுக் ஆகிய இடங்களில் மொத்தம் 2000 போலீ சாரை பாதுகாப்புக்கு நிறுத்திய ஒன்றிய அரசு, 5 அடுக்கு தடுப்பை ஏற்படுத்தி சிசிடிவி மூலம் கண்கா ணிப்பில் இறங்கியது. டிராக்டருடன் வந்த விவசாயிகளை திருப்பி அனுப்பியது. எனினும் தடுப்பை மீறி திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளு டன், சம்யுக்த கிஷான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் திகாயத், மல் யுத்த வீரர் - வீராங்கனைகளைச் சந்தித்து தனது ஆதரவை தெரி வித்தார். அங்கு ராகேஷ் திகாயத் உரையாற்றினார். அப்போது, ‘‘ஒவ்வொரு நாளும் விவசாயிகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் போராட்ட இடத்திற்கு வர முடிவு செய்துள்ளோம். அப்படி வரு வோர் பகலில் இங்கு தங்கி மாலை யில் திரும்புவார்கள். மல்யுத்த வீரர்களின் குழு, போராட்டத்தை கவ னித்துக் கொள்ளும். அவர்களுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆத ரவளிப்போம். அதோடு, மே 21-க்குள் பிரிஜ் பூஷனைக் கைது செய்ய வேண்டும். அரசு அதற்குள்ளாக ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால், நாங்கள் எங்கள் அடுத்த வியூ கத்தை வகுப்போம். எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும், மல் யுத்த வீரர்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும்” அன்று அறிவித்தார். விவசாயிகளுக்கு மல்யுத்த வீரர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரி வித்தனர்.