states

img

கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

நிலம் மற்றும் வீடு உரிமை, விளைபொருள்களுக்கு லாபகரமான விலை, கடன் தள்ளுபடி,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 200 நாள் வேலை கேட்டும், கார்ப்பரேட்களின் லாபத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும்  ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில் காலவரையற்ற போராட்டத்தை துவங்கியுள்ளனர். இந்த போராட்டத்தை அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் விஜூகிருஷ்ணன் துவக்கி வைத்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. வெங்கட், சிபிஎம் கர்நாடகா மாநிலச் செயலாளர் கே.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.