மக்களவையில் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தல்
புதுதில்லி, பிப்.3- கொரோனா பெருந்தொற்று காரண மாக தேர்வுகள் தள்ளிப்போனதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தினார். பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமையன்று, அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரிவின் கீழ் எழுப்பி பி.ஆர். நடராஜன் பேசிய தாவது: கடுமையான கோவிட் பெருந் தொற்றுப் பரவல் காலத்தில், தங்களது இறுதி வாய்ப்பான சிவில் சர்வீஸ் தேர்வு களை எழுத இயலாத பல மாணவர்கள், கூடுதலாக ஒரு தேர்வு எழுதும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
2022 ஜூலையில் நடைபெற்ற தேர்வுகளே பலருக்கு இறுதி வாய்ப்பு என்பதால், அவர்கள் முழுதிறனுடனும் அதிகபட்ச நம்பிக்கையுடனும் தயாராகி இருந்தார்கள். ஆனால் அவர்களது மொத்த நம்பிக்கையையும் கோவிட் பெருந்தொற்று சீர்குலைத்துவிட்டது. தற்போது உறுதியற்ற எதிர்காலத்துட னான ஏமாற்றத்தின் கீழ் உள்ளனர். சீருடைப் பணிக்கான ஸ்டாப் செலக்சன் கமிசன் (SSC) தேர்வுகளை எழுதுவதற்கு, சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கியதைப்போல், இவர்களும் தங்களுக்குக் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோருகிறார்கள். கோவிட் பெருந்தொற்றின் காரண மாக, 27-10-2022 அன்று, மூன்று வருட வயது தளர்வினை ஸ்டாப் செலக்சன் கமிசன் (SSC) நீட்டித்துள்ளது. பணி யாளர், சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக் குழு, வயது தளர்வு பற்றி மேலும் சாதகமான ஆலோசனைகள் வழங்கி, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளை எழுதும் வாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்ட தேர்வாளர் களுக்கு அத்தேர்வுகளை எழுத அனுமதியும் வழங்கியுள்ளது. இதேபோன்று, சிவில் சர்வீஸ் தேர்வு ஆர்வலர்களின் கவலைகளை பரிசீலனையில் எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேர்வுகள் எழுத ஓர் இறுதி வாய்ப்பினை வழங்கு மாறு கேட்டுக் கொள்கிறேன். (ந.நி.)