நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு (49). நடிகராக மட்டுமின்றி திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில், சாய் சூர்யா மற்றும் சொர்ணா குரூப்ஸ் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ஒரே நிலத்தைப் பல பேரிடம் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இத்தகைய சூழலில், சாய் சூர்யா மற்றும் சொர்ணா குரூப்ஸ் நிறுவனங்களின் விளம்பர தூதராக மகேஷ் பாபு உள்ளதால் இந்த முறைகேடு வழக்கு விசாரணைக்காக வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ஹைதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.