states

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் புடாபெஸ்டுக்கு வருமாறு தூதரகம் அறிவுறுத்தல்

புதுதில்லி,மார்ச் 6- உக்ரைனில் பிற பகுதியிலுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டுக்கு வந்து சேரும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் உக்ரைனில்  உள்ள  இந்தியர்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிய அரசு மீட்டு வருகிறது.  மேலும் பல உக்ரைனில் சிக்கித்தவிக்கின்றனர்.  இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்ஷி டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனிலுள்ள பிசோசின் மற்றும் கார்கிவில் உள்ள ஒவ்வொருவரையும் மீட்க இருக்கிறோம். உக்ரைனின் சுமி நகரில் உள்ள எங்களுடைய இந்திய  மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம்.  அதனால், அவர்களின் பாதுகாப்புக்காக உடனடியாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பல வழிகளில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதேபோன்று, எங்களுடைய மாணவர்களையும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், முகாம்களின் உள்ளே இருக்கவும், தேவையற்ற ஆபத்துக்குரிய விசயங்களில் ஈடுபடாமல் தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளோம்.  மாணவர்களுடன் அமைச்சகமும் மற்றும் நம்முடைய தூதரகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.  உக்ரைனில் இருந்து இதுவரை 13 ஆயிரத்து 300 இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பி அழைத்து வரப்பட்டுள்ளனர் என ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதன்படி, உக்ரைனில் எந்த பகுதியில் வசிக்கும் மாணவர்களும் (இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இடங்களை தவிர) உடனடியாக ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் உள்ள ஹங்கேரியா சிட்டி சென்டருக்கு காலை 10 மணி முதல் நண்பகலுக்குள் வரும்படி தெரிவித்துள்ளது. அதற்கு முன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், அனைத்து இந்தியர்களும் அவசர அடிப்படையில், கூகுள் விண்ணப்பத்தில் தங்களுடைய விவரங்களை நிரப்பும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ளது.  பாதுகாப்புடன் இருங்கள்.  தைரியமுடன் இருங்கள் என்றும் தெரிவித்துள்ளது.  உக்ரைனில் இருந்து 21 ஆயிரம் பேர் வெளியேறினர் என்று பக்சி தெரிவித்துள்ளார்.