states

‘இரட்டை இலை’ பற்றி முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை நீடிக்கிறது!

புதுதில்லி, ஜன. 20 - இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத் தையே அணுகுமாறும் மனுதாரரை அறிவுறுத்தி உள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டும் என்று சூர்ய மூர்த்தி என்பவர், தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வந்தது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனி சாமி, ஓ. பன்னீர்செல்வம், மனு தாரர், கே.சி. பழனிசாமி, புகழேந்தி  ஆகிய அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தர விட்டிருந்தது. அதன்படி, பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  அதில், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது எனத் தெரி வித்தார். அதிமுகவில் உறுப்பின ராக இல்லாத ஒருவர், கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கு தொடர  எந்த வித முகாந்திரமும் இல்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சியின் உள்  விவகாரங்கள் தொடர்பாக தேர்தல்  ஆணையத்தில் மனு அளிக்க முடியாது. எனவே, சூர்யமூர்த்தி யின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்து வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.  ஆனால், சென்னை உயர் நீதி மன்றத் தடையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் என்பவர் மேல்முறையீடு செய்தார்.  இந்த மேல்முறையீட்டு மனுவைத்  தான் உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தவர் மனுவை  திரும்பப் பெறுவதாக தெரிவித்த தால், மனு தள்ளுபடி செய்யப் பட்டது.  இதனால், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்ற தடை தொடர்கிறது.