தில்லி தேர்தல் அலுவலரின் அதிகா ரப்பூர்வ அரசு எக்ஸ் வலைதள பக்கத்தில் பாஜகவின் செய்தி மறு பகிர்வு செய்யப்பட்டது பெரும் சர்ச்சை யை கிளப்பியுள்ளது. தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வ மாகவே பாஜகவை ஆதரிக்கின்றதா என கேள்விகள் எழுப்பப்பட்டது. பாஜக தில்லி மாநிலக்குழுவின் அதி காரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அக்கட்சி யின் சில தலைவர்களும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சந்தித்தது குறித்து ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அப்பதிவை தேர்தல் அலுவலரின் அதிகாரப்பூர்வ கணக்கு மறுபகிர்வு ( Retweet ) செய்துள்ளது. இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தேர்தல் ஆணை யத்தின் இந்த பாஜக ஆதரவு செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இத னைத் தொடர்ந்து பாஜக செய்தி தவறுத லாக பகிரப்பட்டதாகவும்,இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் சமா ளித்துள்ளனர்.