புதுதில்லி, ஜூன் 16- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத் தின் (CEPA) கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நிறைவடைந்தது. ஐக்கிய அரபு எமிரேட் ஸின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் டாக்டர். தானி பின் அகமது அல் செயுதி மற்றும் இந்தியாவின் வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இது குறித்து விரிவான விவாதம் நடத்தி னர். தற்போதைய எண்ணெய் அல்லாத வர்த்தகம் 48 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது. இரு நாடுக ளும் 2030-க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் எண்ணெய் அல்லாத வர்த்தகத்தை இலக்காகக் கொள்ள ஒப்புக் கொண்டுள் ளன. இருதரப்பும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் இருதரப்பு வர்த்த கத்தை மறுஆய்வு செய்து, சேவைகளில் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த ஒப்பந்தத் தின் கீழ் குழுக்கள், துணைக்குழுக்கள் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில்களை செயல்படுத்துவது குறித்து புதிய துணைக் குழு தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. வர்த்தக தரவுகளை காலாண்டு அடிப்ப டையில் பரிமாறிக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப் பின் (WTO) பரஸ்பர நலன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் 2024 பிப்ரவரி கடைசி வாரத்தில் அபுதாபியில் நடைபெறவுள்ள உவஅ WTO (MC13) இன் 13ஆவது அமைச்சர்கள் மாநாடு குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். விரிவான பொருளாதார கூட்டாண்மை யுஏஇ (UAE) மற்றும் இந்தியா முழுவதும் உள்ள எஸ்எம்இ (SME) கள், எம்எஸ்எம்இ (MSME)கள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கான ஏற்றுமதி சார்ந்த B2B ஒத்துழைப்பை எளிதாக்குவ தில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்தும்.