states

img

எதிர்பாராத விருந்தினரால் ஆச்சரியம்

கொச்சி, ஏப்.2- கேரளாவின் தென்பரவூரில் உள்ள அன்ன பூர்ணா ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வர்கள் முதலில் அதிர்ச்சியும், பின்னர் ஆச்சரி யமும். அவர்களுக்கு அருகில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி புன்ன கையுடன் சாப்பிட அமர்ந்தார். வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு துவக்க விழா முடிந்து கொச்சி செல்லும்  வழியில் இந்த விடுதிக்குள் நுழைந்தார் ஸ்டா லின். சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சி தெரிவித்த  ஸ்டாலின், உடன் இருந்தவர்களிடம் உரை யாடினார். ஹோட்டல் ஊழியர்களிடமும் பேசினார். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது அங்கிருந்தவர்கள் சூழ்ந்துகொண்ட னர். சிலர் அவருடன் புகைப்படம் எடுக்க விரும்புகிறார்கள். அதற்கு ஸ்டாலினும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். இறுதியாக அனைவரிடமும் விடைபெற்றுத் திரும்பி னார். நெடும்பாச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய முதல்வர் ஸ்டாலின், ஞாயி றன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார்.