பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் காங் கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வ ராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவக் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற பெய ரில் கர்நாடகாவில் முதல்வர் மாற் றம் செய்யபோவதாக பாஜக ஆத ரவு “கோடி மீடியா” ஊடகங்கள் சனிக்கிழமை மாலை முதல் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதாவது சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வும், டி.கே.சிவக்குமார் முதல்வ ராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியா கின. மேலும் சித்தராமையா - டி.கே. சிவக்குமார் மோதல் சம்பவத்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்பொழுதும் வேண்டுமானாலும் கவிழும் என “கோடி மீடியா” ஊட கங்கள் தலைப்புச் செய்தியாக கூறி வந்தன. இத்தகைய சூழலில், “கர்நாட காவில் முதல்வர் மாற்றம் இல்லை” என “கோடி மீடியா” ஊடகங்களு க்கு டி.கே.சிவக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”முதல்வர் மாற்றம் என வெளி வரும் தகவல்களில் உண்மை யில்லை. காங்கிரஸ் தலைமையின் வழிகாட்டுதலின் படி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கி றோம். எனவே யாரும் கவலைப் பட வேண்டாம். தற்போதைய சூழலில் அரசியல் மாற்றம் தேவை யில்லை. மக்கள் எங்களை தேர்வு செய்து ஆட்சி அதிகாரத்தை வழங் கியுள்ளார்கள். அதனை முழுமை அடையச் செய்வோம். எனக்காக யாரும் எதையும் பெற்று தர வேண் டியதில்லை. எனக்கு யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. எனக்காக எந்த ஒரு எம்எல்ஏவும் பேச வேண்டும் என நான் கேட்க வில்லை. இது எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான விஷயம். கட்சி என்ன சொல்கிறதோ, அதை கச்சிதமாக செய்து முடிப்பேன்” என அவர் கூறினார்.