states

img

அப்துல்கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற டி.கே.ரங்கராஜனுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு

புதுதில்லி, மார்ச் 29- அப்துல்கலாம் வாழ்நாள் சாதனை யாளர் விருதுபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாநி லங்களவைக்குழு முன்னாள் தலைவரு மான டி.கே.ரங்கராஜனுக்கு, தில்லித் தமிழ்ச்சங்கத்தில் பாராட்டுவிழா நடை பெற்றது. பாராட்டு விழாவில் மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், தயாநிதி வீராசாமி, மாநிலங்களவை செயலக கூடு தல் இயக்குநர்(மொழிமாற்று வல்லுநர்) வீர.வியட்நாம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன் முதலானவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வீர.வியட்நாம் தனது வாழ்த்துரையில், “இடது பக்கம் செல்லவும் (Keep always left) என்ற சொற்றொடர் நமக்கெல்லாம் சாலை விதி. அவருக்கோ வாழ்வியல் நியதி. இந்த விருது அவருக்கு சிறந்த நாடாளுமன்றவாதியாக மட்டுமல்ல, ஒரு  சிறந்த மனிதராக, உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைய வரும் நல்ல  நண்பராக, தோள் கொடுக்கும் தோழராக, நல்ல குடும்பத் தலைவராக, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்த புரட்சியாளராக, கள்ள மில்லாத அன்பினால் கட்சி அரசியல் கடந்து, சாதி , மத, இன , மொழி பேதங்கள் கடந்து அனைவரையும் அன்போடு அர வணைக்கும் தந்தையாக, சகோதரனாக, தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பிறருக்கான நன்மைகளுக்காகவும், அவர்களது உரிமைக்கு குரல் கொடுப்ப வராக, வாழ்நாள் முழுவதும் அறம் சார்ந்த வாழ்க்கையை நெறிபிறழாமல் வாழ்ந்ததற்காக கொடுக்கப்பட்ட அங்கீகாரமே, அப்துல் கலாம் விருது” என்று குறிப்பிட்டார். “தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்கள், உள்ளூர் பிரச்சனைகளிலிருந்து சர்வதேச விவகாரங்கள் வரை விரல் நுனியில் வைத்திருப்பார்.  மிகவும் பக்தி நெறிமிக்க குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த இவர், சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக பணிக்கு சேர்ந் தார். அங்கு தொழிலாளர்கள் பிரச்சனை களை கண்டு அவர்களை அணிதிரட்டி, சிஐ டியு தொழிற்சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராக உருமாறி, மக்கள் தலைவராக, கம்யூனிஸ்ட் கட்சியில் அகில இந்திய அளவில் பணிபுரியும் தொழிலாளர் போராளியாக பரிணமித்தார்” என்றும் வியட்நாம் குறிப்பிட்டார்.

டி.கே.ரங்கராஜன் ஏற்புரை

விழாவில் ஏற்புரை நிகழ்த்திய டி.கே.ரங்கராஜன், “நான் சாதாரண தொழி லாளி. நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததால், அந்த இயக்கம் என்னைத் தயார்ப்படுத்தியது. அந்த இயக்கம் என்னை தயார்ப்படுத்தியதால், இந்த அளவிற்கு வந்திருக்கிறேன். நான் கம்யூனிஸ்ட் கட்சி யில் சேராமல் இருந்திருந்தால், இடது கை பெருவிரலாக மட்டுமே இருந்திருப் பேன். ஓய்வுபெற்று வீட்டில் எங்காவது மூலையில் உட்கார்ந்துகொண்டிருப் பேன். தொடர்ந்து மக்கள் நலனுக்காக, தொழிலாளர் வர்க்க நலனுக்காக உழைப் பேன்” என்று கூறினார். (ந.நி.)