states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

உத்தரகண்ட் மாநிலத்தை தொடர்ந்து பேரழிவுகள் தாக்கி வருகின்றன. இதற்கு முன்பு இந்த மாநிலத்தில் இமயமலையையொட்டி அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் பூமிக்குள் புகுந்தது. இப்போது உத்தர காசியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியின்  போது சார்தாம் நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதைக்குள் நிலச்சரிவு ஏற்பட்டு 40 தொழி லாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களது கதி என்ன வென்று தெரியவில்லை. இதுபற்றி சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து மோடி அரசை எச்சரித்து வருகிறார்கள்.  ஏற்கெனவே இந்தப் பிரதேசம் முழு வதிலும் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள் ளது. சுற்றுச்சூழல் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக மக்களின் வாழ்வும் உயிரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. கவனிக்க வேண்டியது என்னவென்றால் இரட்டை எஞ்சின் என்று கூறிக்கொள்ளும் ஒன்றிய, மாநில, பாஜக அரசாங்கங்கள் கண்களை மூடிக் கொண்டிருப்பதுதான்.