states

img

திரிபுராவில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்திடுக!

புதுதில்லி, பிப்.11- திரிபுரா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் நியாய மாகவும் நேர்மையாகவும் நடத்திட வேண்  டும் என்றும், தேர்தல் ஆணையம் இதற்கு  உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்  என்றும்  வலியுறுத்தி, தலைநகர் புதுதில்லி  நாடாளுமன்ற வீதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன தர்ணா போராட்டம் நடைபெற்றது. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16  அன்று சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற விருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலி ருந்தே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான தாக்குதல்கள் நாள்தோறும் நடைபெற்று வருவதால் அங்கே நியாயமாகவும் நேர் மையாகவும் தேர்தல் நடைபெறுமா என்  கிற ஐயுணர்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே,  திரிபுரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்திட உரிய நடவ டிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இந்தத் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்ற இந்தத் தர்ணா போராட்டத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். 

அவர் உரையாற்றும்போது திரிபுரா வில் அரசமைப்புச் சட்டத்தின் கீழ், நாடா ளுமன்ற நடைமுறையின் கீழ், ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெறுகிறதா என்கிற கேள்வியை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டு காலத்தில் அங்கே நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலுமே மிகப்பெரிய அளவில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இடதுசாரிக்  கட்சித் தலைவர்களுக்கு எதிராக வன்  முறை வெறியாட்டங்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. 2018 மார்ச்சுக்கும் 2021 ஜூனுக்கும்  இடையே இடதுசாரிக் கட்சிகளின் 667  அலுவலகங்களும், இடதுசாரி வெகுஜன  அமைப்புகளின் 204 அலுவலகங்க ளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும்  ஆதரவாளர்களின் 3363 வீடுகளும்,  659 கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்  ளன, இடித்துத் தரைமட்டமாக்கப்பட் டுள்ளன. 1,500க்கும் மேற்பட்ட மீன்பிடிக் குட்டைகளும், ரப்பர் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.  

2021 செப்டம்பர் 7 மற்றும் 8 தேதி களில், 44 கட்சி அலுவலகங்கள் தீக்கிரை யாக்கப்பட்டன. இவற்றில் 42 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், தலா 1 ஆர்எஸ்பி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியையும் சேர்ந்தவைகளாகும். அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு அலுவலகமும் இவர்  களின் தாக்குதலிலிருந்து தப்ப வில்லை. திரிபுரா பழங்குடியின மக்க ளின் மகத்தான தலைவராக விளங்கிய வரும், திரிபுரா மாநில முன்னாள் முதல்வ ருமான,  தசரத் தேவ் மார்பளவு சிலையைக் கூட இவர்கள் நாசப்படுத்தி யுள்ளனர். பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிப்பாய்கள் பாது காப்புப் பணியிலிருந்து அப்புறப்படுத்தப்  பட்டுவிட்டார்கள். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களுக்குச்  சொந்தமான 67 வீடுகள் சூறையாடப் பட்டுள்ளன, தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, இவர்களில் பலர் தாக்கப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு விதமான காட்டாட்சி சூழலை உத்தர வாதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்து டனேயே இவ்வாறு அராஜக நடவடிக்கை களில் இறங்கியுள்ளார்கள். செபாஹி ஜலா மாவட்டத்தில் சரிலம் என்னுமிடத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தினை பாஜக குண்டர்கள் தாக்கியுள்ளார்கள். இந்தத் தாக்குதலில் வயதான விவசாயத் தோழர் சாஹித் மியான் கொல்லப்பட்டார்.

இத்தகைய சூழ்நிலையில் அங்கே நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவது சாத்தியமில்லை. எனவே  தேர்தலை நியாயமாகவும் நேர்மையாக வும் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல்  ஆணையத்திற்கு இருக்கிறது. சாமானிய வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்ப தற்கு உரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திட வேண்டும்.இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார். கூட்டத்தில் ஹன்னன்முல்லா உட்பட இதர தலைவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.    (ந.நி.)