தில்லி சட்டமன்றத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு'
தில்லி சட்டமன்றத்தில் பாஜக அரசாங்கம் புதிதாகப் பத விப் பிரமாணம் எடுத்துக்கொள் வதைப் பதிவு செய்வதற்காக வந்த ஊடகவியலாளர்கள் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதற்கு தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் சுஜாதா மாதோக், துணைத் தலைவர் எஸ்.கே.பாந்தே மற்றும் பொதுச் செயலாளர் ஏ.எம்.ஜிகீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது: “2025 பிப்ரவரி 24 அன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காக வந்த ஏஎன்ஐ, ஏபிபி நியூஸ் மற்றும் பிடிஐ ஊடக வியலாளர்கள் சட்டமன்ற வாயி லில் தடுத்து நிறுத்தப்பட்டிருக் கிறார்கள். அடுத்த நாள் டைம்ஸ் நவ், நவ்பாரத், நியூஸ் நேஷன், நியூஸ் 18, ஜீ நியூஸ், ஜன்தந்த்ரா ஊடகங்களைச் சேர்ந்த 5 இத ழாளர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது. பின்னர் அவர்களின் சகாக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை யடுத்து இவர்களில் சிலர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சமீப காலங்களில் நாடாளு மன்றத்திலும் சில செய்தியாளர் களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்ப தைப்போன்று சட்டமன்றத்திலும் கட்டுப்பாடுகளை விதித்திட தில்லி அரசாங்கம் முன்வந்திருப்பதைப் போன்றே தோன்றுகிறது. தற்சம யம் நாடாளுமன்றத்தில் தற்காலிக/அமர்வுரீதியாக நுழைவுச்சீட்டுகள் அளிக்கப்படுவதை தில்லி பத்திரி கையாளர் சங்கம் இதர சங்கங்களு டன் சேர்ந்து எதிர்த்து வந்திருக் கிறது. இவ்வாறு பத்திரிகை யாளர்களிடையே பாகுபாடு காட்டப் படுவதையும் தில்லி பத்திரிகை யாளர் சங்கம் கண்டிக்கிறது. இத்தகைய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்காக தகுதியுள்ள அனைத்து இதழாளர்களுக்கும் முறையான அனுமதிச்சீட்டுகள் உட னடியாக வழங்கப்பட வேண்டும் என்று தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது” என அந்த அறிக்கையில் அவர்கள் கோரியுள்ளார்கள். (ந.நி.)