states

img

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக தில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுதில்லி: நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரவாத இந்துத்துவ சக்தி களால் நடத்தப்படும் வேட்டையாடலுக்கு எதிராக புதுதில்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.19) பல்வேறு கிறிஸ்தவ தேவா லயங்கள் உட்பட 79 அமைப் புகள் போராட்டம் நடத்தின.  எபிஸ்கோபல் தேவால யங்கள் முதல் சுவிசேஷ பெந்தேகோஸ்தே தேவால யங்கள் வரை பல்வேறு  அமைப்பினர் இப்போராட்டத் தில் கரம் கோர்த்தன. மதத் தலைவர்கள், பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் விசுவாசிகள் எதிர்ப்புப் பேர ணியில் பங்கேற்றனர். விடுதலைக்குப் பிறகு, நாட்டில் இதுபோன்ற ஒருங் கிணைக்கப்பட்ட கிறிஸ்தவ இயக்கம் அரிதாகவே நடந் துள்ளன. உ.பி., சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தர காண்ட், கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங் களில், கிறிஸ்தவ துன்பு றுத்தல் அனைத்து எல்லை களையும் மீறியுள்ளதாக வும், 2022 இல் 21 மாநிலங் களில் 597 வன்முறைச் செயல்கள் நடந்ததாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.