புதுதில்லி, ஏப்.6- ஜனநாயகத்தின் மீதான ஒன்றிய பாஜக அர சின் நடவடிக்கைகளைக் கண்டித்து, எதிர்க்கட்சி கள் வியாழனன்று தில்லியில் தேசியக் கொடி யுடன் பேரணியாக சென்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் துவங்கி விஜய் சவுக் வரை நடைபெற்ற இந்த பேரணியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே), ஆம் ஆத்மி கட்சி, தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகளின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நாடாளுமன்றக் கூட்டத்தொட ரின் நிறைவில், மக்களவை சபாநாயகரும், மாநி லங்களைத் தலைவரும் எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில், வியாழனன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்தையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் புறக்கணித்தனர்.
நடப்பு நிதியாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 அன்று துவங்கியது. இரண்டு கட்டங்களாக பிரித்து நடத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி கடந்த பிப்ரவரி 13 அன்றுடன் முடிவ டைந்தது. இரண்டாம் பாதி மார்ச் 13 அன்று துவங்கியது. எனினும், முதல் பாதி அமர்வு களைப் போலவே, இரண்டாம் பாதி அமர்வும் முழுமையாக முடங்கியது. 16 நாட்கள் நாடாளு மன்றம் கூடியும் எந்த அலுவல்களும் நடை பெறவில்லை. கவுதம் அதானியின் ரூ. 17 லட்சத்து 80 ஆயி ரம் கோடி பங்குச் சந்தை முறைகேட்டால், ‘எல்ஐசி’, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் இழப்புக்கு உள்ளாகியுள்ளன. அதானியின் நலனுக்கான இந்த பொதுத்துறை நிறுவனங்களில் இருந்த மக்களின் சேமிப்பு கபளீகரம் செய்யப்பட்டுள் ளது. எனவே, இதன் பின்னுள்ள உண்மை களை மக்களுக்கு தெளிவுபடுத்த நாடாளு மன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
ஆனால், அதானி ஊழல் குறித்து விவாதம் நடைபெற்றுவிடக் கூடாது என்று பதற்றம் அடைந்த பாஜக அரசு, லண்டன் பல்கலைக் கழக உரையில் ராகுல் காந்தி இந்தியாவை மதிப்பை கேள்விக்கு உட்படுத்தி விட்டார்; அதற் காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒன்றுக்கும் ஆகாத ஒரு பிரச்சனையை எழுப்பி, ஆளும் பாஜக அரசே நாடாளுமன்றத்தை அமளிக்காடாக்கியது. கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி கடந்த 15 நாட்களாக அவை நடைபெறாமல் பார்த்துக் கொண்டது. விவாதம் இல்லாமலே முடிந்துபோன
பட்ஜெட் கூட்டத் தொடர்
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான வியாழனன்று (ஏப். 6) நாடாளு மன்றம் கூடிய நிலையில், அதானி ஊழல் குறித்து விவாதிக்க மறுக்கும் மோடி அரசைக் கண்டிக்கும் விதமாக, எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் கறுப்பு உடையுடன் வந்திருந்தனர். மேலும் அதானி ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கங்களையும் எழுப்பினர். இதனால் கூடிய சிறிது நேரத்திலேயே மக்களவை கால வரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறி விக்கப்பட்டது. இதேபோல மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை, பின்னர் நாள் முழு வதுமே ஒத்திவைக்கப்பட்டது. இதனால், பட்ஜெட் கூட்டத் தொடர் முழுமையாகவே விவா தம் எதுவும் நடைபெறாமல் நடந்து முடிந்தது. கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால், பிரதமர் நரேந்திர மோடி வியாழனன்று நாடா ளுமன்றத்திற்கு வந்திருந்தார்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை
முன்னதாக, மல்லிகார்ஜூன கார்கே அறை யில் கூடி ஆலோசித்த எதிர்க்கட்சித் தலை வர்கள், அதானியைக் காப்பாற்றுவதற்காக இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் மோடி அரசை கண்டித்து, நாடாளு மன்ற வளாகத்தில் துவங்கி விஜய் சவுக் வரை, தேசியக் கொடி ஏந்தியபடி பேரணியாக சென்ற னர். பகல் 11.30 மணிக்கு அந்த ஊர்வலம் நாடா ளுமன்றத்தில் இருந்து தொடங்கியது. நாடா ளுமன்றத்தின் முதல் வாயிலில் எம்.பி.க்கள் திரண்டிருந்தபோது சோனியா காந்தியும் தேசியக் கொடியுடன் பேரணியில் இணைந்து கொண்டார். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே), ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கி ரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் நிறைவில், காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது, ‘’ஜனநாயகம் குறித்து நரேந்திர மோடி அரசு நிறைய பேசு கிறது. ஆனால், அவர்களின் செயல்களில் அது பிரதிபலிப்பதில்லை. ராகுல் காந்தி நாடாளு மன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார். அதன் பிறகும் அவர் தனது லண்டன் பேச்சுக் காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. அவர்களின் செயல், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதாக உள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துவது எதிர்க்கட்சிகளின் கடமை. அரசு அதனைக் கேட்கத் தயாராக இல்லையென் றால் அது பிடிவாதம். ஜனநாயகம் உயிர்ப்பு டன் இருக்க வேண்டும் என்று யாரும் விரும்பி னால் எதிர்க்கட்சிகளின் குரல்களை கேட்பது முக்கியம்” என்றும் குறிப்பிட்டார். “பழைய ரயிலில் புதிய இன்ஜினை மாற்றி விட்டு அதற்கு விழா எடுக்கிறார்கள். அதில், பிரதமர் மோடி பங்கேற்று மிக நீண்ட உரையை நிகழ்த்துகிறார். ரயில் தொடக்க விழாவுக்கு பிர தமர் செல்ல வேண்டுமா? அவர் என்ன அந்தத் தொகுதியின் எம்.பி.யா?’’ என்றும் கார்கே மோடி அரசின் செயல்பாடுகளை சாடினார். முன்னதாக எதிர்க்கட்சிகளின் பேரணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்கள வைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன், “இந்திய மக்களின் கோடானகோடி பணத்தை சூறையாடும் ‘மோதானி’யின் கூட்டினை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமெனக் கேட்டே கையில் தேசியக் கொடியுடன் இந்த பேர ணியை நடத்துகிறோம்” என்று தெரிவித்தார்.