states

img

அம்பேத்கரின் உறுதிமொழிகளை பாஜக தனது கேவலமான அரசியலுக்கு பயன்படுத்துகிறது!

புதுதில்லி, அக். 10 -  தில்லியில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தலித் மக்கள் சுமார் 10  ஆயிரம் பேர் இந்து மதத்தில் இருந்து  வெளியேறி புத்த மதத்தைத் தழுவினர்.  இந்த விழாவில் தில்லி சமூக நலத்துறை, கூட்டுறவுத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ராஜேந்திர பால் கவுதமும் கலந்து கொண்டார்.  1956-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை துறந்து புத்த மதத்தை தழுவியபோது, “எனக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன்  மீது நம்பிக்கை இல்லை. அவர்களை நான் வழிபட மாட்டேன். கடவுளின் அவதாரமாக கூறப்படும் ராமர் மீதும், கிருஷ்ணர் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அவர்களை யும் நான் வழிபட மாட்டேன். விஷ்ணு வின் அவதாரமே புத்தர் எனக் கூறப்படுவது பொய்ப் பிரச்சாரம்” என 22 உறுதிமொழிகளை ஏற்றார். அந்த உறுதிமொழிகள் தில்லி யில் பவுத்தத்தைத் தழுவும் நிகழ்ச்சி யிலும் ஏற்கப்பட்டன. அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் இந்த உறுதி மொழியை வாசித்தார். அவரைத் தொடர்ந்து, அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளி யாகின.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக-வினர் கடந்த 5 நாட்களாக அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் மற்றும் தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மோச மான அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். கெஜ்ரிவால் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கெஜ்ரி வால் ஒரு இந்து விரோதி என பாஜக- வினர் சுவரொட்டிகளை அடித்து ஒட்டினர். ராஜேந்திர பால் கவுதம் அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்ய வேண்டும் என்றும்  நெருக்கடி கொடுத்து வந்தனர். மற்றொரு புறத்தில் கெஜ்ரிவாலும், ராஜேந்திர பால் மீது கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த பின்னணியில், ராஜேந்திர பால் கவுதம் தனது அமைச்சர் பத வியை ராஜினாமா செய்துள்ளார். “அக்டோபர் 5-ஆம் தேதி அம்பேத்கர் பவனில் நடந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட முறையிலேயே நான் கலந்து கொண்டேன். ஆம் ஆத்மி கட்சிக்கும் நான் அமைச்சராக இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜக முன்னாள் அமைச்சர் தாவர் சந்த் கெலாட் எழுதிய அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் என்ற புத்தகத்தின் 17-ஆவது பதிப்பிலும் பாபா சாகேப்பின் 22 சபதங்கள் இடம்பெற்றுள்ளன. இவை நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் வரு கின்றன. ஆனால், பாஜக இதை கேவலமான அரசியலுக்கு பயன் படுத்துகிறது, அதனால் நான் எனது அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக-வினர் எனக்கு தொடர்  அச்சுறுத்தல்களை தருகின்றார் கள். எனது கட்சிக்கும் முதலமைச்ச ருக்கும் களங்கம் விளைவிக்கின்றா ர்கள். நான் அதற்கு அஞ்சவில்லை. நான் அம்பேத்கர் மற்றும் புத்தர் காட்டிய வழியில் வாழ்பவன் என்றும் ராஜேந்திர பால் கவுதம் கூறியுள்ளார்.