states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்த்தி மீதான சைபர் தாக்குதல் ; கேரள மதச்சார்பின்மைக்கு அவமானம்

எம்.வி.கோவிந்தன் கடும் கண்டனம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கொச்சி எடப்பள்ளியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தி மீதான கடுமையான சைபர் தாக்குதல், கேரள மதச்சார்பின்மைக்கு அவமானம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “படுகொலையால் முழுப் பகுதியும் பீதியில் இருந்தபோது, காஷ்மீரைச் சேர்ந்த அந்த இரண்டு இளம் முஸ்லிம் ஓட்டுநர்கள் உதவிக்காக எங்களிடம் ஓடி வந்தனர். அவர்கள்தான் காஷ்மீரில் எனக்குக் கிடைத்த இரண்டு சகோதரர் கள். அவர்கள் என்னை ஒரு சகோதரி யைப் போல நடத்தினார்கள் என்ற  ஆர்த்தியின் நேர்மையான வார்த்தை களுக்கு எதிராக சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. கேரளம் உட்பட பரவலான சைபர் தாக்குதல் நடந்துள்ளது. மத நல்லி ணக்க சூழலைக் கெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கேரளாவில் கூட மக்கள் இதுபோன்ற இனவெறி உள்ளது கண்டனத்துக்கு உரியது. இது மதச் சார்பற்ற உள்ளடக்கத்தை அவமதிப்ப தாகும். பஹல்காம் பயங்கரவாத தாக்கு தலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாட்டின் எதிரிகள் தலைமை தாங்கினர். காஷ்மீரில் உள்ள அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு போராடுகிறார்கள். ஜமாத்தே இஸ்லாமி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. பயங்கர வாத தாக்குதல்கள் என்ற பெயரில் வகுப்பு வாதத்தைப் பரப்பும் நடவடிக்கையை அடையாளம காண வேண்டும்” என எம்.வி. கோவிந்தன் கூறினார். ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரில்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ராகுல் காந்தி  ஆறுதல்

ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் 26 பேர் உயிரிழந்தனர். 20க்கும்  மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை அன்று ஜம்மு-காஷ்மீர்  சென்றார். ஸ்ரீநகர் ராணுவ மருத்துவ மனைக்குச் சென்ற ராகுல் காந்தி பயங்கர வாதத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரைச் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார். புதுதில்லி

தில்லி மேயராக  ராஜா இக்பால் சிங்  

பாஜக ஆளும் தில்லி யில் மேயரை தேர்வு  செய்வதற்கான தேர்தல் வெள்ளிக் கிழமை அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்த தால் பாஜக, காங்கிரஸ் இடையே இரு முனை போட்டி ஏற்பட்டது. பதிவான 142 வாக்குகளில் 133 வாக்குகளைப் பெற்ற பாஜகவைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் 8 வாக்குகளைப் பெற்றது.  ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப் பட்டது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தில்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் பாஜக கைப்பற்றியுள்ளது.

சோனியா, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் மறுப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கு

நேஷனல் ஹெரால்டு மூலம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டு பிரி வின் தலைவர் சாம் பிட்ரோடா, ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் அறங்காவலர் சுமன் துபே ஆகியோர் ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை அப கரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி, ஏப்ரல் 15ஆம் தேதி தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற விசார ணையின் போது, ஏப்ரல் 25ஆம் தேதி  அன்று அடுத்தகட்ட விசாரணை மேற் கொள்ளப்படும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டு இருந்தார்.  இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நேஷனல் ஹெரால்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்திற்கு பின்பு நீதிபதி விஷால் கோக்னே,”அமலாக்கத்துறை கூடுதல் ஆவணங்களை பதிவு செய்து குறை பாடுகளை நீக்க வேண்டும். சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கேட்காமல் வழக்கு குற்றப்பத்திரி கையை விசாரிக்க முடியாது. காந்தி குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற  அமலாக்கத்துறையின் வாதம் தவ றானது. கூடுதல் ஆவணங்கள் திருப்தி யாக இருக்கும் வரை காந்தி குடும்பத்தின ருக்கும் மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பும் உத்தரவை பிறப்பிக்க முடியாது” என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மும்பை

பங்குச் சந்தைகளை  பதம் பார்த்த  பயங்கரவாதத் தாக்குதல்

ரூ.10 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் காரண மாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் வெள்ளிக்கிழமை அன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் பெரிய சரிவை சந்தித்தது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,004.04 புள்ளிகள் சரிந்து 78,797,39 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 338.1 புள்ளிகள் சரிந்து 23,908.60 புள்ளிகளாக இருந்தன.  வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 588.90 புள்ளிகள் சரிந்து 79,212.53 புள்ளி களிலும், நிப்டி 207.35 புள்ளிகள் சரிந்து 24,039.35 புள்ளிகளிலும் நிலைபெற்றது. பெரும்பாலான நிறுவன பங்குகளும் இறக்கம் கண்டுள்ளன. அதே போன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.9.7 லட்சம் கோடியாக குறைந்து ரூ.419.86 லட்சம் கோடியாக சரிவடைந்தது. இதன்மூலம் ரூ.10 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.  சென்செக்ஸ் சரிவுக்கு ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ மற்றும் பஜாஜ் பைனான்ஸ் முக்கிய பங்களிப்பை அளித்தன. கோடக் வங்கி, எச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பிற வங்கி பங்குகளும் சரிவை சந்தித்தன. இந்த பங்குகள் ஒட்டுமொத்த  சென்செக்ஸ் வீழ்ச்சியில் 360 புள்ளி களுக்கு மேல் பங்களித்தன.