states

img

சீனா உடனான வர்த்தக உறவை துண்டிப்பதால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கும்!

புதுதில்லி, டிச. 24 - சீனாவுடனான வர்த்தக உறவு களைத் துண்டித்தால், இந்தியா வின் வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்று ‘நிதி ஆயோக்’ முன்னாள் துணைத் தலைவரும் பொருளாதார வல்லுநருமான அரவிந்த் பன காரியா தெரிவித்துள்ளார். எல்லையில் நடக்கும் ஊடுருவ லுக்குப் பதிலடியாக, சீனாவுடனான வர்த்தக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியரான பனகாரியா பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழலில் சீனாவு டன் வர்த்தகப் போரில் ஈடுபட்டால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவை தியாகம் செய்ய வேண்டி யிருக்கும். பொருளாதார அடிப் படையில் பார்த்தால், அது புத்தி சாலித்தனமான நடவடிக்கை அல்ல. மாறாக, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுட னான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில், அந்நாடுகளுடன் தடை யற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொள்ளலாம்.

எல்லை விவகாரத்தில், இந்தி யாவும் சீனாவும் பொருளாதாரத் தடை ‘விளையாட்டை’ ஆட முடியும். ஆனால், 17 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட சீனப் பொருளாதாரம், 3 டிரில்லி யன் அமெரிக்க டாலர் மதிப்பு  கொண்ட இந்திய பொருளாதா ரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாக இருக்கும். எல்லையில் சீனாவின் அத்து மீறல்களுக்காக பொருளாதாரத் தடை விதித்து, அந்நாட்டை தண்டிக்க வேண்டும் என்று இந்தி யாவில் சிலர் விரும்பலாம். ஆனால், சீனாவை நாம் தண்டிக்க முயன் றால், அது பின்வாங்காது. வலிமை மிக்க நாடான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு சீனா ஆற்றிய எதிர்வினை மூலம் இது ஏற்கெனவே நிரூபணம் ஆகி யுள்ளது. சீனா, ரஷ்யா ஆகிய நாடு கள் மீதான பொருளாதாரத் தடை  விதிப்பில், அமெரிக்கா போன்ற பெரும் நாடுகளே பெரிய  வெற்றி பெற முடியவில்லை.

இந்தியா, சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை, இந்த நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோ பர் காலகட்டத்தில் 51.5 பில்லி யன் அமெரிக்க டாலர்களை எட்டி யுள்ளது. இந்தியா இறக்குமதி செய்யும் பல பொருள்களை மலி வான விலையில் விநியோகிக்கும் நாடாக சீனா இருக்கிறது. எனவே, சீனாவிடமிருந்து இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது. மறுபுறம், இந்தியா ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருட்களுக்கு சீனா சிறந்த விலையைத் தருவதில்லை. எனவே, அமெரிக்கா உள்ளிட்ட இதர வர்த்தக கூட்டுறவு நாடுக ளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கி றது. இது, சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறைக்கும் அமெரிக்கா உடனான வர்த்தக உபரிக்கும் கார ணமாகிறது. இதில் கவலைப்பட எதுவும் இல்லை. சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க இதர வர்த்தக கூட்டுறவு நாடுகளுடனான வர்த்தக உறவை இந்தியா வேக மாக விரிவுபடுத்த வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்பு கள் அனைத்தையும் பயன்படுத்தி, இந்தியாவின் பொருளாதாரத்தை முடிந்தவரை வேகமாக வளர்ப்ப தில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அரவிந்த் பன காரியா தெரிவித்துள்ளார்.