பெங்களூரு, மார்ச் 16- “ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப் பட்ட தடையை உயர்நீதிமன்றமும் ஏற் றுக்கொண்டிருப்பதன் மூலம், சொந்த நாடே எங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக உணர்கிறோம்” என்று ஹிஜாப் வழக்கின் மனுதாரர்களான ஐந்து மாணவிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய மாணவியர், கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு கர்நாடக அரசு தடை விதித்த நிலையில், அதனை எதிர்த்து 5 மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இந்த முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் ஜே.எம். காஜி, கிருஷ்ணா தீட்சித் ஆகியோர் அடங் கிய அமர்வு, “கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு என மத அடையாளங்களைத் தாங்கி வரத் தடை விதித்து பிப்ரவரி 5, 2022-ல் விதிக் கப்பட்ட உத்தரவு செல்லும். பள்ளிச் சீருடை என்பது சட்டப்பூர்வமானதே” என்று செவ்வாயன்று உத்தரவு பிறப்பித்தனர். “ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. இது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமை யின் கீழ் வராது” என்றும் குறிப்பிட்ட னர். இது இஸ்லாமிய மாணவர் களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், ஹிஜாப் வழக்கின் மனு தாரர்களான 5 மாணவிகளும் ஊட கங்களுக்கு பேட்டி ஒன்றை அளித் துள்ளனர்.
அதில், “மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் மீதான தடை யை உறுதி செய்யும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, எங்கள் சொந்த நாடே எங்களுக்கு துரோகம் செய்த தாக உணர வைக்கிறது. நீதி அமைப் பின் மீது எங்களுக்கு மிகுந்த நம் பிக்கை இருந்தது. தற்போது எங்க ளுக்கு கிடைத்திருப்பது அநீதி. பெண்கள் தலைமுடி மற்றும் மார்பை மறைக்க வேண்டும் என்று குரானில் கூறப்பட்டுள்ளது. இதை குரா னில் குறிப்பிடாமல் இருந்திருந்தால் நாங்கள் ஹிஜாப்பை அணிந்திருக்க மாட்டோம். குரானில் இதைக் குறிப் பிடாமல் இருந்திருந்தால் நாங்கள் போராடியிருக்க மாட்டோம். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இன்று உயிருடன் இருந்திருந்தால், இந்த தீர்ப்பை கேட்டு அழுது கொண்டிருப்பார். உள்ளூர் மட்டத்தில் தீர்க்கப்பட்டி ருக்க வேண்டிய இந்த பிரச்சனை இப்போது அரசியலாக்கப்பட்டுள் ளது. ஹிஜாப் அணியாமல் கல்லூ ரிக்கு செல்ல மாட்டோம், அதற்காக தொடர்ந்து போராடுவோம். நாங்கள் அனைத்து சட்ட வழிகளிலும் முயற்சிப்போம். நீதிக்காகவும் எங்கள் உரிமைகளுக்காகவும் போராடுவோம்” என்று அவர்கள் குறிப் பிட்டுள்ளனர்.