states

img

மார்ச் 16 மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை  மாநாடு அறிவிப்பு

புதுக்கோட்டை, பிப்.6-  அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பிப்.4,5,6 தேதிகளில் புதுக் கோட்டையில் நடைபெற்றது. நிறைவு  நாளான திங்கள்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பிரதிநிதிகளின் விவாதங் களுக்கு மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் தொகுப்புரை வழங்கி னார். மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பி.வெங்கட், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஆகியோர் பேசினர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில், சங்கத்தின் மாநிலத் தலைவராக எம்.சின்னத்துரை எம்எல்ஏ.,  பொதுச் செயலாளராக வீ.அமிர்தலிங்கம், பொருளாளராக அ.பழனிச்சாமி, துணைத் தலைவர்களாக ஏ.லாசர், பி.வசந்தாமணி, மலைவிளைபாசி, அ.கோதண்டன், ஜி. ஸ்டாலின், எம்.முருகையன், ஜி.கணபதி,  செயலாளர்களாக எஸ்.சங்கர், எம்.முத்து, சி.துரைசாமி, எஸ்.பூங்கோதை, எஸ்.பிரகாஷ், வீ.மாரியப்பன், க.சண்முக வள்ளி உள்ளிட்ட 82 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவுசெய்து தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் உரையாற்றினார். விவசாயத் தொழிலாளர்கள் சங்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் டி.சலோமி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

விவசாயப் பணிகளில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளர்களுக்கு 1948 குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின்படி, கடந்த 5 ஆண்டுகளாக கூலி உயர்த்தப்பட வில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான சிரமத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, விவசாயத் தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி யை ரூ.600-ஆக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் குடும்பத்திற்கு 100 நாள் வேலையும், அரசு சட்டக்கூலி ரூ.281-ஐ குறைக்காமல் வழங்கவும், தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி 150 நாள் வேலை வழங்கவும் வேண்டும். நகர்ப்புறங்களோடு இணைக்கப்பட்ட கிராமங்களில் வேலையின்மை தொடர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு  2021-இல் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்பு கள் மூலமாக செயல்படுத்தியது. இது நகர்ப்புற மக்களுக்கு ஆறுதலாக அமைந்தது. ஆனால், 2022-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, வரும் நிதியாண்டில் குறைந்த பட்சம் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து திட்டத்தை முழுமையாக அமலாக்கம் செய்திட வேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகை யில் தமிழ்நாடு அரசு விவசாயத்  தொழி லாளர்களுக்கு என தனித்துறையை உரு வாக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 16 அன்று  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்து வது என மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.


 

;