மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதையாகும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். காப்பீடு மற்றும் கூடுதல் நிவாரணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரெங்க பாளையம், கிச்சநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 2 பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ள னர்; மேலும் பலர் காயமுற்றுள்ள னர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு ஆலை கள் மற்றும் கடைகளில் விபத்து கள் அதிகரித்து வருகின்றன. ஏற்க னவே, இதுபோன்ற விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் 17 செவ்வா யன்று ஒரே நாளில் 14 பேர் பலி யாகியுள்ளனர். விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங் கலை தெரிவிக்கிறது. இவ்வாறு கொடும் விபத்து கள் தொடர்கதையாகும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தீவிரப்படுத்த வேண்டும். பட்டாசு ஆலை விபத்துகள் பெரும் பாலும் பாதுகாப்புக் குறைபாடு களால் ஏற்படுகின்றன. எனவே, பாதுகாப்பு விதிகள் குறித்த அரசு கண்காணிப்பை அதிகரிப்பதுடன், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல் படுத்த வேண்டும், பிரிமீயம் தொகையினை சம்பந்தப்பட்ட பட்டாசு நிறுவனங்கள் செலுத்திட உத்தரவிட வேண்டுமெனவும், கூடுதல் நிவாரணத்தை உறுதி செய்ய வேண்டுமெனவும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.