states

திரிபுராவில் பாஜக குண்டர்களால் சிபிஎம் ஊழியர் படுகொலை

புதுதில்லி, டிச.1- திரிபுராவில் பாஜக குண்டர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் ஷாஹித் மியா கொல்லப்பட்டதற்கும், மற்றும் பலர் தாக்கப்பட்டுக் காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திரிபுராவில் நவம்பர் 30 அன்று சரிலம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைவர்களும், ஊழியர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டு, ஷாஹித் மியா என்ற தோழர் கொல்லப்பட்டுள்ளார், பலர் காயமடைந்துள்ளனர். இந்தக் குரூரமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. செபாஹிஜாலா மாவட்டத்தில் சரிலம் நகரில்  உள்ளூர் கட்சி அலுவலகத்தை மீண்டும் திறப்ப தற்காக கட்சியின் ஊழியர்கள் சென்றபோது, இந்த வன்முறைத் தாக்குதல் பாஜக குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படிஅலுவலகம் பாஜகவினரால் வலுக்கட்டாயமாக கடந்த நான்கரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.  பாஜக குண்டர்களின், இந்த தாக்குதலில் ஷாஹித் மியா கொல்லப்பட்டார். மேலும், கட்சியின்  மூத்த தலைவர், முன்னாள் நிதியமைச்சர் பானு  லால் சாஹா உட்பட பலர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர்.  திரிபுராவில் 2018 பிப்ரவரியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து

மாநில சட்டம்-ஒழுங்கு நிலைமை இவ்வாறுதான் இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் இதர எதிர்க்கட்சி களும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வில்லை. அவர்களின் அலுவலகங்களைத் திறக்க முடியவில்லை. இயல்பான அரசியல் நடவடிக்கை களை மேற்கொள்ள முடியவில்லை. இன்னும் இரு  மாதங்களில் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியினர் நிர்வா கம் மற்றும் காவல்துறையின் கள்ளத்தனமான உடந்தையோடு எதிர்க்கட்சி அரசியல் தலை வர்கள் மீது மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்கிறது. தோழர் ஷாஹித் மியாவைப் படுகொலை செய்த கயவர்களைக் கைது செய்யவும், வன்முறை  வெறியாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதும் காவல்துறையினர் உறுதியாக நடவடிக்கை எடுத்திடவும் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலி யுறுத்துகிறது. திரிபுராவில், நேர்மையான மற்றும்  நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமானால், ஜனநாயகமும், ஜனநாயக உரிமைகளும் முழுமையாக மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஐஎன்என்)