புதுதில்லி, செப்.24- பாஜக எம்பியின் கொடிய வெறுப்புப் பேச் சுக்கு உள்ளான மக்களவை உறுப்பினர் டேனிஷ் அலிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் “சந்திரயான் 3” வெற்றி தொடர்பான விவாதம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது தெற்கு தில்லி தொகுதி பாஜக எம்.பி., ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., டேனிஷ் அலி யை தீவிரவாதி, சுன்னத் செய்தவர் என்பது உட்பட மிக மிக இழிவான முறையில் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார். இத்தகைய மதவெறியின்-வெறுப்பின் உச்சக்கட்ட உமிழ்வை பாஜக அமைச்சர்கள் ரசித்தன ரே தவிர யாரும் தடுக்கவில்லை, கண்டிக்க வில்லை. அவர் பேசி முடித்த பின்பு, அவரது பேச்சின் கொடூரத்தை அறிந்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரி வித்து, அந்த வார்த்தைகளை அவைக்குறி ப்பில் இருந்து நீக்கிவிடுமாறு அவைத் தலை வருக்கு கோரிக்கை விடுத்தார். அந்த வார்த்தைகளை ஏற்கெனவே அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டதாக அவை யை நடத்திய காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் தெரிவித்தார். இந்நிலையில், ரமேஷ் பிதூரியை அவை யில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் ஆவேச முழக்கமிட்டனர். சொந்தக் கட்சி எம்பியை பாஜக இழிவுபடுத்திய போதிலும் பகுஜன் சமாஜ் கட்சி பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், பகுஜன் சமாஜ் எம்.பி., டேனிஷ் அலியை காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத் மற்றும் சுபாஷினி அலி ஆகியோர் டேனிஷ் அலியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டேனிஷ் அலி நன்றி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத் மற்றும் சுபாஷினி அலி ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்த டேனிஷ் அலி, உங்கள் ஆதரவில் நம்பிக்கை இருப்பதாகவும், கட்சிக்கு வாழ்த்து தெரி விப்பதாகவும் கூறியுள்ளார்.