புதுதில்லி, ஜன.10- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரை யாற்றும்போது, மாநில அரசாங்கத் தால் தயார் செய்து அளிக்கப்பட்ட உரை யில் பல பகுதிகளைப் படிக்காமல் தாவிச் சென்ற செயலானது, சந்தேகத்திற்கிட மின்றி ஏற்கமுடியாததாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி யுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக் கையில் மேலும் கூறப்பட்டிருப்ப தாவது: தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ரவியின் செயலானது, அரசமைப்பு ச்சட்ட விதிகளை வெட்கமின்றி மீறிய செயலாகும். அரசமைப்புச்சட்டத் தின்கீழ், ஆளுநர் என்பவர், தேர்ந்தெடு க்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் குர லாகத்தான் செயல்பட வேண்டும். மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப் பட்ட உரையை முழுமையாக அவர் படிக்க வேண்டும் என்பதுதான் நீண்ட காலமாக நிலைநிறுத்தப்பட்டு வந்துள்ள மரபு ஆகும். இப்போது அவர் அவ்வாறு தயார் செய்யப்பட்ட உரை யில் சில பகுதிகளைப் படிக்காமல் தாவிச் சென்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
மேலும் சட்டம்-ஒழுங்கு துறையில் மாநில அரசின் சாதனையை அவர் படிக்காமல் தவிர்த்திருப்பதை ஆராயும்போது, அவர் எந்த அளவிற்கு மாநில அரசாங்கத்திற்கு எதிராக விரோத மனப்பான்மையுடன் இருக்கிறார் என்பதையும் வெளிப் படுத்துகிறது. சட்டம்-ஒழுங்கு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் பிரத்தியேக உரிமை யாகும். மேலும், அவர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பாரம்பர்யங்களை உயர்த்திப்பிடித்த தலைவர்களின் பங்களிப்புகள் தொடர்பான வாசகங் களையும் படிக்காமல் தவிர்த்துள்ளார். ஆளுநர் ரவியின் செயல்கள், தற்போதைய பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் கீழ், ஆளு நரின் அலுவலகம் என்பது மாநில அரசாங்கங்களின் அரசமைப்புச்சட்ட பங்களிப்புகளை அரித்து வீழ்த்து வதற்கான ஒரு கருவியாக உபயோகப் படுத்தப்படுகிறது என்பதையும் இந்தப் போக்கு அதிகரித்துக்கொண்டி ருப்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் அவருடைய செய லானது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான போக்காகும். அனைத்து அதி காரங்களையும் ஒன்றிய அரசே எடுத்துக்கொள்ள வேண்டுமென் பதற்கான பெருவிருப்பத்தையுமே அவரது செயல்கள் காட்டுகின்றன. இவ்வாறு அரசியல் தலை மைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)