கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட மாநாடு ஜனவரி 25 முதல் 27 வரை நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநிலச் செயலாளருமான எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் பிரதிநிதிகள் மாநாட்டை துவக்கி வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். மாநாட்டில் 46 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. சி.என்.மோகனன் மீண்டும் எர்ணாகுளம் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.