states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டாக்டர் தாமஸ் ஐசக்

முக்கிய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை  வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் பாதுகாப்பு அபாயங்களை பிரதமர் மோடி தெளிவாக விளக்க வேண்டும். ரிலையன்ஸ் (அம்பானி) மற்றும் பாரத் டெலினெட் (மிட்டல்) உள்ளிட்ட தனியார் இரட்டைவேட கூட்டணி, பிஎஸ்என்எல்-இன் சவப்பெட்டியில் அடிக்கும் கடைசி ஆணியாக இருக்கும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா

ரீபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப்பின் கூச்சல் நிறைந்த தேசப்பற்று, உண்மையில் பணத்தின் மீது கொண்டிருக்கும் பற்று என்பது அம்பலமாகி இருக்கிறது. இந்தியாவை திட்ட சொல்லி பாகிஸ்தானியர்களுக்கு பணம் கொடுத்து தன்னுடைய தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றியிருப்பது அதிர்ச்சிக்குரிய விஷயம் ஆகும்.

ஊடகவியலாளர் ராணா அயூப்

ஒரு காலத்தில் க்ரெட்டா தன்பெர்க் உலகநாடுகளால் கொண்டாடப்பட்டார். முன்னணி பத்திரிகைகளின் முகப்புகளிலும், சர்வதேச செய்தி நிறுவனங்களின் தலைப்புச் செய்திகளிலும் இடம்பெற்றார். பிறகு அவர் காசாவை பற்றி பேசினார். எல்லோரும் அமைதியாகி விட்டார்கள். க்ரெட்டாவின் பேச்சை தலைப்புச் செய்திகளாக எவரும் எடுக்கவில்லை.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல்

நான் சரத் பவாரிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும், தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. நான் எனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. சரத் பவார் உடன் தான் இருக்கிறேன் ; இருப்பேன்.