வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீதான வன்முறை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சரிடம் மனுவை வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராம பழங்குடி மக்கள் மீது 1992 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசாங்க அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள், வன்முறை; 18 பெண்கள் பாலியல் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது; பொய் வழக்கில் குழந்தைகள் உட்பட 133 பேர் சிறையில் அடைக்கப்பட்டது, கிராமமே சூறையாடப்பட்டது உலகம் அறிந்த செய்தியாகும். இந்த கொடுமைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் நடத்திய நீண்ட, நெடிய போராட்ட த்தின் விளைவாக 2011 செப்டம்பர் 29 ஆம் தேதி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் இக்குற்ற த்தில் ஈடுபட்ட அனைவரும் குற்றவாளிகள் என வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியது. வன்புணர்வு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் பிணையில் வெளியில் வந்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது 2023 செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தும், குற்றவாளிகளின் மனுக்களை தள்ளு படி செய்தும் தீர்ப்பளித்துள்ளார். அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட அம்சங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறோம்.
பாலியல் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கும் உடனடி யாக அரசு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வன்புணர்ச்சி குற்றம் செய்த குற்றவாளிகளிடமிருந்து இதில் 50 சதவிகித தொகையை (ரூ. 5 லட்சம்) அரசு வசூலிக்க வேண்டும். இது குறித்து நீதி மன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட 18 பெண்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான அரசு வேலை வழங்க வேண்டும். வாச்சாத்தி கிராம மக்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தவும், கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் இதுவரை அரசுத் தரப் பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி என்னென்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட இருக்கிறது என்பது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சம்பவம் நடந்த போது பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்ப்பின் மேற்கண்ட அம்சங்களில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகை யில், நிலமற்ற குடும்பங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலமும், நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை உறுதி செய்யும் வகையில் கிராமத்தில் தொழில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்கிட வேண்டும். அத்துடன் வனஉரிமைச் சட்டம் 2006 இன் படி வன நிலங்களை பயிரிட்டு வரும் குடும்பங்களுக்கு பட்டா மற்றும் வன சிறு மகசூல் சேகரித்து விற்பனை செய்வதற்கான உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாச்சாத்தி கிராம மக்களின் பயன்பாட்டிற்கு உதவிடும் வகையில் சமுதாயக் கூடம் கட்டித் தருவதுடன், வாச்சாத்தியிலிருந்து கலசப்பாடி கிராமத்திற்கு செல்லும் சாலையை நல்ல முறையில் சீரமைத்து, தார்ச்சாலையாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 இன் கீழ் நடைபெற்ற தால் பழங்குடியினர் அல்லாதோருக்கு இதுவரை எவ்வித இழப்பீடும் கிடைக்கப் பெறவில்லை. சம்பவம் நடைபெற்ற காலத்தில் பழங்குடியினர் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 12 குடும்பங்கள் கடுமையான பொருளாதார பாதிப்புகளுக்கும், தாக்குதல் மற்றும் சிறையிலடைக்கப்பட்டு இழப்புக்கும் ஆளாகியுள்ளனர். எனவே, இந்த 12 குடும்பங்களுக்கும் நிவாரணத்தொகை வழங்கிட அரசு முன்வர வேண்டும். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989, விதிகள் 1995 இன் படி வழங்க வேண்டிய நஷ்ட ஈடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் இதுவரை வழங்கப்படாத சட்டப்படியான நிலுவைத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.