புதுதில்லி, பிப்.9- பிப். 14-ஐ பசுக்களை அணைக்கும் தினமாக கொண்டாடச் சொல்லும் ஒன் றிய பாஜக அரசின் அறிக்கை, சமூக வலைதளங்களில் கடும் கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறது. பிப்ரவரி 14 - உலக காதலர் தின மாக கொண்டாடப்படுகிறது. ஆனால், காதலர் தினம் மேற்கத்திய சீரழிவு கலாச்சாரம் என்றும் அதனை இந்தியா வில் கொண்டாட விடமாட்டோம் என்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் நீண்டகால மாகவே கூறி வருகின்றன. காதலர் தினத்தன்று, இளை ஞர்களும், இளம்பெண்களும் பொது இடத்தில் கூடியிருந்தாலே, அவர்களின் உறவு என்ன? அவர்கள் சகோதர சகோ தரிகளா, காதலர்களா என்பதையெல் லாம் கணக்கில் கொள்ளாமல் தாக்கு தலும் நடத்தி வருகின்றன. காதலர் தினம் வந்துவிட்டாலே விஎச்பி, பஜ்ரங் தளம், இந்து முன்னணி கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நாய்க ளுக்குத் திருமணம், பூனைகளுக்குத் திருமணம் என்று வேடிக்கை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். காதலால் சாதி, மத, இன, மொழி பேதங்கள், பொருளாதார ஏற்றத் தாழ்வு கள் தகர்கின்றன. அவ்வாறு நடப்பது தங்களின் சனாதன பழமைவாத சிந்த னைக்கு எதிரானது. எனவே, காதலை மேற்கத்திய கலாச்சாரம் என்று எதையா வது கூறி தடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
எனினும், அவர்களின் எதிர்ப்பை யும் மீறி ஒவ்வொரு ஆண்டும், இந்தியா வில் காதலர் தினம் கொண்டாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில்தான், மிரட்டல் மூலம் காதலர் தின கொண்டாட்டங்களைத் தடுக்க முடியாததால், அன்றைய நாளில் புதிதாக வேறொன்றின் மேல் கவ னத்தை திசைத்திருப்புவதற்காக வழக்கம்போல தங்களின் ‘கோமாதா’ அரசியலைக் கையில் எடுத்துள்ளனர். அதனை தங்களுக்குள்ள ஆட்சி யதிகாரத்தைப் பயன்படுத்தி, அர சாங்கம் மூலமாகவே செயல்படுத்தவும் திட்டமிட்டு, இந்திய விலங்குகள் நல வாரியம் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையானது, “பிப்ர வரி 14-ஆம் தேதியை பசுமாடுகளை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டா டுங்கள்” என்று இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. “பசுமாடுகள்தான் இந்திய கலாச்சா ரம் மற்றும் கிராமப்புற பொருளாதா ரத்தின் முதுகெலும்பு என நமக்கு தெரியும். பசு நம்மை வாழவைக்கும் நம் வளத்தை குறிக்கும். பசுக்களை ‘காம தேனு’ எனவும் ‘கோமாதா’ என அழைப்ப தற்கு காரணம் மனித சமூகத்திற்கு பசு தாய் போல் செயல்படுகிறது. மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தால் வேதகால பண் பாடு அழிந்து வருகிறது. நம் கலாச்சார மும் பண்பாடும் மறக்கடிக்கப்பட்டது.
பசுக்கள் பல பலன்களைத் தருவ தால், பசுவைக் கட்டிப்பிடிப்பது மனரீதி யான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனிநபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே பசு மீது நேசம் கொண்டவர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள். நம் தாய் பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகை யிலும் நல்ல சக்தி பரப்பும் வகையில் இந்நாளை கொண்டாடுவோம். இது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் முறையான ஒப்புத லுடன் வெளியிடப்படுகிறது” என விலங்கு கள் நல வாரியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. இந்திய சினிமாக்களில் பசுக்களுடன் கதாநாய கர்கள், நாயகிகள் தோன்றும் காட்சி களையும் காமெடியான பசு வீடியோக் கள், மீம்களைப் பகிர்ந்து சமூகவலைதள வாசிகள் கேலி செய்து வருகின்றனர். மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், இந்தி யாவில் “மகிழ்ச்சி பொங்க” இரண்டு வழிமுறைகளை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதாவது... அதானி யை மோடி அணைப்பார். மக்கள் பசுவை அணைக்க வேண்டும்..! இதுவல்லவோ அரசு.” என்று கிண்டலடித்துள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணி யின் மாநிலச் செயலாளர் டி.ஆர்.பி ராஜா தனது டுவிட்டர் பதிவில், “என்ன எழவுடா இது? சங்கிகள் வருகிறார்கள்! பசுக்களே ஜாக்கிரதை” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், “இந்த பசு அணைப்பு தினத்தையும் நெதர்லாந்தை பார்த்து தான் காப்பி அடித்துள்ளார்கள். இது சங்கிகளின் பசுவின் மீதான உண்மை யான அன்பின் வெளிப்பாடு அல்ல” எனவும் குறிப்பிட்டுள்ளார்.